India
“என் தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக்கேட்கிறார்கள்; தடுக்காவிட்டால் வழக்கு தொடர்வேன்”- டி.ஆர்.பாலு எச்சரிக்கை!
தனது கைபேசி, மற்றும் வீடு, அலுவலகத் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்படுவதாக சென்னை மண்டல பி.எஸ்.என்.எல். தலைமைப் பொது மேலாருக்கும், தொலைத் தொடர்புத்துறை செயலாளருக்கும் ஈ-மெயில் மூலம் டி.ஆர்.பாலு புகார் அனுப்பியுள்ளார்.
இதனை உடனடியாகத் தடுக்காவிட்டால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்றும் டி.ஆர்.பாலு எம்.பி. எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பி.எஸ்.என்.எல் தலைமைப் பொது மேலாளருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், "எனது அலைபேசி எண்கள் மற்றும் தொலைபேசி எண்கள் ஆகியவற்றின் தகவல் பரிமாற்றங்கள் ரகசியமாகப் பதிவு செய்யப்படுகின்றன என்ற பெருத்த சந்தேகம் எழுகிறது.
சட்டத்திற்குப் புறம்பாக என்னுடைய அடிப்படை உரிமையை மீறும் வகையில் பதிவு செய்யப்படும் எனது அலைபேசி மற்றும் தொலைபேசி எண்கள் விதிமீறல் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு தாங்கள் தவறும் பட்சத்தில் நீதிமன்றத்தின் வாயிலாக உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை தொடர்வேன் என்று இந்தக் கடிதத்தின் வாயிலாக தெரியப்படுத்திக் கொள்கிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
பிரசார பாடலுக்கு தடை : ஆம் ஆத்மியை குறிவைக்கும் தேர்தல் ஆணையம் ? - குவியும் கண்டனம் !
-
"அமேதியில் ராகுலுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்வேன்" - வயநாடு தொகுதி CPI வேட்பாளர் ஆனி ராஜா பேட்டி !
-
“சிறையில் அடைத்ததற்கு பதிலடி கொடுக்க வாக்களிப்போம்” - ஆம் ஆத்மியின் பிரசார பாடலுக்கு தேர்தல் ஆணையம் தடை!
-
குஜராத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 149 கிலோ போதைப்பொருள் : சீல் வைக்கப்பட்ட தயாரிப்பு ஆலை !
-
இஸ்ரேல் தாக்குதலில் தரைமட்டமான காசா: கட்டட கழிவுகளை அகற்ற 14 ஆண்டுகள் தேவைப்படும் - ஐ.நா தகவல் !