India
மோடி பெயரைச் சொல்லி தகராறு செய்த பயணி... பாதி வழியில் தரையிறங்கிய விமானம்! #Video
பாரிஸிலிருந்து டெல்லி நோக்கி ஏர் பிரான்ஸ் விமானம் வந்து கொண்டிருந்தது. இந்த விமானம் பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, இந்திய பயணி ஒருவர் திடீரென, சக பயணிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது, விமானத்திலிருந்த உதவியாளர்கள் அவரை அமைதியாக இருக்கும்படி கூறியுள்ளனர். ஆனால் அவர் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியின் பெயரைச் சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் விமான அதிகாரிகள் உடனடியாக விமானத்தை பல்கேரியாவின் தலைநகரான சோஃபியாவில் இறக்கினர். பிறகு அந்த நபரை விமானத்தில் இருந்து வெளியேற்றி விட்டு, விமானம் அங்கிருந்து டெல்லிக்கு மீண்டும் தன் பயணத்தைத் தொடங்கியது.
இந்த நிகழ்வை, விமானத்தில் இருந்த சக பயணி ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், விமானப் பாதுகாப்புக்கு ஆபத்து விளைவித்ததாக அந்த நபர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும் என விமான அதிகாரி ஏஞ்சலோவ் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“பிரச்சார Mode-ல் இருக்கும் விஜய்; தமிழ்நாட்டின் பாதுகாப்புச் சக்தி திமுக” : எழிலன் நாகநாதன் பேட்டி!
-
இளம்பெண் மீது கார் ஏற்றிப் படுகொலை : சென்னையை உலுக்கிய கொடூரம்!
-
”தொடர்ந்து 2வது ஐபிஎல் கோப்பை… சாதனை படைத்த RCB.. தோனி, ரோகித் பட்டியலில் ரஜத் படிதார்” - முழு விவரம்!
-
“ரிசர்வ் வங்கி விதிமுறைகளை காரணம் காட்டி விவசாயிகளுக்கு துரோகம் செய்யும் த.வெ.க அரசு”: தங்கம் தென்னரசு!
-
”விஜயின் ஆட்சி '20 நாள் இருண்ட காலம்'.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு” : முரசொலி கடும் விமர்சனம்!