India
மோடி பெயரைச் சொல்லி தகராறு செய்த பயணி... பாதி வழியில் தரையிறங்கிய விமானம்! #Video
பாரிஸிலிருந்து டெல்லி நோக்கி ஏர் பிரான்ஸ் விமானம் வந்து கொண்டிருந்தது. இந்த விமானம் பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, இந்திய பயணி ஒருவர் திடீரென, சக பயணிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது, விமானத்திலிருந்த உதவியாளர்கள் அவரை அமைதியாக இருக்கும்படி கூறியுள்ளனர். ஆனால் அவர் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியின் பெயரைச் சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் விமான அதிகாரிகள் உடனடியாக விமானத்தை பல்கேரியாவின் தலைநகரான சோஃபியாவில் இறக்கினர். பிறகு அந்த நபரை விமானத்தில் இருந்து வெளியேற்றி விட்டு, விமானம் அங்கிருந்து டெல்லிக்கு மீண்டும் தன் பயணத்தைத் தொடங்கியது.
இந்த நிகழ்வை, விமானத்தில் இருந்த சக பயணி ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், விமானப் பாதுகாப்புக்கு ஆபத்து விளைவித்ததாக அந்த நபர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும் என விமான அதிகாரி ஏஞ்சலோவ் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது” -முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் வருத்தம்!
-
5வது மாடியில் இருந்து வீசப்பட்ட பேச்சிளம் குழந்தை... தாயை அதிரடியாக கைது செய்த போலீஸ் -விசாரணையில் பகீர்!
-
காணாமல் போன மோடி : காணவில்லை என சுவரொட்டி அடித்த மணிப்பூர் மக்கள்!
-
பிரசாரத்துக்கு சென்ற பாஜக வேட்பாளருக்கு எதிர்ப்பு: சம்பவ இடத்திலேயே விவசாயி பரிதாப பலி -குவியும் கண்டனம்!
-
“பெண்கள் என்றால் எதை வேண்டுமானாலும் பேசலாமா ?” - சவுக்கு மீடியா சங்கருக்கு மகளிர் காங்கிரஸ் கண்டனம் !