India
மோடி பெயரைச் சொல்லி தகராறு செய்த பயணி... பாதி வழியில் தரையிறங்கிய விமானம்! #Video
பாரிஸிலிருந்து டெல்லி நோக்கி ஏர் பிரான்ஸ் விமானம் வந்து கொண்டிருந்தது. இந்த விமானம் பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, இந்திய பயணி ஒருவர் திடீரென, சக பயணிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது, விமானத்திலிருந்த உதவியாளர்கள் அவரை அமைதியாக இருக்கும்படி கூறியுள்ளனர். ஆனால் அவர் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியின் பெயரைச் சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் விமான அதிகாரிகள் உடனடியாக விமானத்தை பல்கேரியாவின் தலைநகரான சோஃபியாவில் இறக்கினர். பிறகு அந்த நபரை விமானத்தில் இருந்து வெளியேற்றி விட்டு, விமானம் அங்கிருந்து டெல்லிக்கு மீண்டும் தன் பயணத்தைத் தொடங்கியது.
இந்த நிகழ்வை, விமானத்தில் இருந்த சக பயணி ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், விமானப் பாதுகாப்புக்கு ஆபத்து விளைவித்ததாக அந்த நபர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும் என விமான அதிகாரி ஏஞ்சலோவ் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ஜனநாயகத்தின் மீது தாக்குதல்: முதல்வர்கள், அமைச்சர்கள் பதவி நீக்கம் மசோதாவுக்கு இந்தியா கூட்டணி எதிர்ப்பு
-
மோடி - அமித்ஷாவின் பிளாக்மெயில் மசோதா : எதிர்க்கட்சிகளை ஒடுக்க நினைக்கும் ஒன்றிய அரசு!
-
நீதித்துறையை விமர்சித்த சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு! : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
-
"முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் மிக பெரிய வரலாறு இது" - அமைச்சர் துரைமுருகன் பெருமிதம் !
-
”அரசாங்கத்தின் மூலதனம் பொதுப்பணித்துறை” : அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!