India
மோடி பெயரைச் சொல்லி தகராறு செய்த பயணி... பாதி வழியில் தரையிறங்கிய விமானம்! #Video
பாரிஸிலிருந்து டெல்லி நோக்கி ஏர் பிரான்ஸ் விமானம் வந்து கொண்டிருந்தது. இந்த விமானம் பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, இந்திய பயணி ஒருவர் திடீரென, சக பயணிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது, விமானத்திலிருந்த உதவியாளர்கள் அவரை அமைதியாக இருக்கும்படி கூறியுள்ளனர். ஆனால் அவர் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியின் பெயரைச் சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் விமான அதிகாரிகள் உடனடியாக விமானத்தை பல்கேரியாவின் தலைநகரான சோஃபியாவில் இறக்கினர். பிறகு அந்த நபரை விமானத்தில் இருந்து வெளியேற்றி விட்டு, விமானம் அங்கிருந்து டெல்லிக்கு மீண்டும் தன் பயணத்தைத் தொடங்கியது.
இந்த நிகழ்வை, விமானத்தில் இருந்த சக பயணி ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், விமானப் பாதுகாப்புக்கு ஆபத்து விளைவித்ததாக அந்த நபர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும் என விமான அதிகாரி ஏஞ்சலோவ் தெரிவித்துள்ளார்.
Also Read
-
கோவை : தந்தை பெரியார் நூலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு - பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு!
-
“குழந்தை வெண்பா நம் மனங்களில் நிறைந்து வாழ்வாள்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்த இந்தியா… வெளியேறிய ஜிம்பாப்வே அணி… இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்!
-
ஒ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்துள்ளது சரியான அரசியல் முடிவு : தி.க தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வரவேற்பு!
-
"ஓ.பன்னீர்செல்வம் வரவு நல்வரவாகட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!" : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!