India
"பாரத் மாதா கீ ஜே" என்று முழக்கமிட உங்களுக்கு உரிமையில்லை : பா.ஜ.கவை கடுமையாகச் சாடிய உத்தவ் தாக்ரே!
மகாராஷ்ட்ரா மாநில பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 1ம் தேதியில் இருந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில், முதல்வர் உத்தவ் தாக்ரே, சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தின் பெயரை மாற்றியது குறித்தும், பா.ஜ.க சீனாவை கண்டு அஞ்சுவது குறித்தும் கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.
சட்டப்பேரவை கூட்டத்தில் உத்தவ் தாக்ரே பேசுகையில், மோடெரா மைதானம் நரேந்திர மோடி மைதானமாக பெயர் மாற்றப்பட்டுள்ளதால், நாம் இனி எந்த கிரிக்கெட் போட்டியிலும் தோற்க மாட்டோம். சத்ரபதி சிவாஜி மகாராஜின் பெயரை நாங்கள் சர்வதேச விமான நிலையத்திற்கு சூட்டியுள்ளோம். ஆனால் அவர்களோ, சர்தார் வல்லபாய் படேலின் பெயரையே மாற்றியுள்ளனர்.
டெல்லி எல்லையில் விவசாயிகள் போராடிவரும் பகுதிகளில், மின்சாரம், குடிநீர் விநியோகத்தை துண்டித்ததோடு மட்டும் அல்லாமல், அவர்களின் பாதையில் ஆணிகளைப் பதிக்கிறது மோடி அரசு. ஆனால் சீனாவைப் பார்க்கும்போது மத்திய அரசு பயந்து ஓடுகிறது. சீனா எல்லைகளில் இந்த நடவடிக்கைகளை எடுத்திருந்தால் ஊடுருவலாவது நடக்காமல் இருந்திருக்கும்.
மேலும், பா.ஜ.க-வின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் சுதந்திர போராட்டத்தில் அங்கம் வகிக்கவில்லை. 'பாரத் மாதா கீ ஜே’ என்று கோஷமிடுவது மட்டும் உங்களை ஒருபோதும் தேசபக்தராக ஆக்காது" என தெரிவித்துள்ளார். முன்னதாக, புதுச்சேரியை தொடர்ந்து, சிவசேனா-காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசை கவிழ்க்க பா.ஜ.க சதி செய்வதாக சிவசேனா கட்சி பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
த.வெ.க எம்.எல்.ஏ-வை முற்றுகையிட்ட மக்கள் : கொடுத்த வாக்குறுதி என்னாச்சு? - சரமாரி கேள்வி!
-
த.வெ.க அகராதியிலேயே.. : “மின்வெட்டே இல்லை” என பொய் சொல்லும் நிர்மல்குமாருக்கு தி.மு.க ஐடி விங் கண்டனம்!
-
“காவல்துறை, காவி எஜமானர்களின் Control-க்கு சென்றுவிட்டதா?” : த.வெ.க.விற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
“விஜய் போனது சக நடிகரை ஐஸ் வைக்கத்தானே தவிர முதலீடுகளை ஈர்ப்பதற்காக அல்ல!” : முரசொலி தலையங்கம்!
-
“வரலாற்றிலேயே இல்லாத டம்மி முதலமைச்சர்.. ஸ்டிக்கர் ஒட்டி பொய் பரப்புகின்றனர்” : உதயநிதி ஸ்டாலின் பேச்சு!