India
அயோத்தி ஏர்போர்ட்டுக்கு ராமர் பெயர் வைக்க 101 கோடி; கோவிட் தடுப்பூசிக்கு 50 கோடி - யோகி அரசின் ஓரவஞ்சனை!
யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆளும் உத்தர பிரதேச மாநிலத்தில் கொரோனா தடுப்பூசிக்காக மாநில பட்ஜெட்டில் 50 கோடி ரூபாய் மட்டும் ஒதுக்கிவிட்டு அயோத்தியில் விமான நிலையம் கட்டுவதற்கு 140 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநில வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஐந்தரை லட்சம் (5,50,270.78) கோடி ரூபாய்க்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் காகிதமில்லாத நிதி நிலை அறிக்கையாகவும் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
அதில், அயோத்தியை புணரமைப்பதற்காகவும், சீரமைப்பதற்காகவும் 640 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. அதிலும் ராமர் கோயில் கட்டுவதற்காக மட்டுமே 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
மேலும் வாரணாசி, அயோத்தி சுற்றுலா தலத்தை மேம்படுத்துவதற்காக தலா 100 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அயோத்தியில் உள்ள விமான நிலையத்திற்கு ‘மரியாதா புருஷோத்தம் ஸ்ரீராம்’ என பெயரிடுவதற்கு 101 கோடி ரூபாயும், மாநிலத்தின் சுற்றுலா வளர்ச்சி திட்டத்துக்கு ரூ.200 கோடியும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு 50 கோடி, லக்னோவில் பழங்குடி அருங்காட்சியகம், ஷாஜகான்பூரில் சுதந்திர போராளிகளின் கேலரி அமைக்க 8 மற்றும் 4 கோடியும் என குறைவான அளவிலேயே நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
Also Read
-
பெண்களை தொடர்ந்து அசிங்கப்படுத்தும் அதிமுக MP சி.வி.சண்முகம் : கொதித்தெழும் திமுக MP-க்கள் - விவரம்
-
“தமிழுக்காக ஒன்றிய அரசு செலவு செய்த தொகை எவ்வளவு?” - தயாநிதி மாறன் எம்.பி. சரமாரி கேள்வி!
-
“முதலமைச்சர் செல்லும் இடமெல்லாம் மக்கள் வெள்ளத்தில் நீந்திச் செல்கிறார்!” : முரசொலி தலையங்கம்!
-
முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற வருண், வாஷிங்டன் சுந்தர்… கையில் கொடுத்த ஆச்சரியப் பரிசு: முழு விவரம்!
-
மீண்டும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைய ஓய்வறியாமல் உழைப்போம்: செல்வப்பெருந்தகை அழைப்பு!