India
கரையான்களுக்கு இரையான சொந்த வீடு கனவு.. ரூ.5 லட்சத்தை பறிகொடுத்த பன்றி வியாபாரி.. ஆந்திராவில் சோகம்!
ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ளது மயிலாபுரம் என்ற கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த பிஜிலி ஜமாலயா என்பவர் பன்றி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்குச் சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்பது நெடுநாள் கனவாக இருந்தது.
இதற்காக பிஜிலி ஜமால்யா தனது ஆடம்பர செலவுகளை எல்லாம் புறந்தள்ளிவிட்டு பன்றி வியாபாரத்தில் கிடைக்கும் பணத்தின் சிறு பகுதியை மனைவியிடம் கொடுத்து சிறுக சிறுக சேமித்து வந்துள்ளார். இந்த பணத்தை ஒரு பழைய இரும்பு பெட்டியில் வைத்து சேமித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், வியாபாரத்தில் கிடைத்த ஒரு லட்சம் ரூபாயை இந்த இரும்பு பெட்டியில் வைப்பதற்காக, பெட்டியைத் திறந்துள்ளார். அப்போது அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. இவர் பல மாதங்களாக சிறுக சிறுக சேமித்து வைத்திருந்த ரூபாய் 5 லட்சத்தையும் கரையான்கள் அரித்திருப்பதைக் கண்டு, அப்படியே சத்தமாக அழுத படி தரையில் சரிந்து விழுந்தார்.
இது பற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் பிஜிலி ஜமால்யாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது "பிஜிலி ஜமால்யா வீடு கட்டுவதற்காகச் சேமித்து வைத்திருந்த பணம் என்றும், எங்களிடம் வங்கி கணக்கு இல்லாததால் பழைய இரும்பு பெட்டியில் பணத்தைச் சேமித்து வந்ததாகவும்" போலிசாரிடம் அவர் கூறினார். பின்னர் போலிஸார், "முறைகேடு பணமாக இல்லாமல் இருந்தால் உங்களுக்கு உதவுவதாக" அவரிடம் தெரிவித்திருக்கிறார்கள்.
Also Read
-
‘சமக்ர சிக்ஷா’ திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கான நிதியை 34% குறைத்தது ஏன்?: ராஜாத்தி சல்மா எம்.பி கேள்வி!
-
“ஆசிரியர்கள் பற்றாக்குறையைத் தீர்க்க ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கை என்ன?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
“சென்னை இராஜீவ்காந்தி மருத்துவமனையில் ‘நரம்பியல் துறை’ கட்டடம் விரைவில் திறக்கப்படும்!” : அமைச்சர் மா.சு!
-
“நெல்வயல்களில் தேங்கியுள்ள வெள்ள நீரை உடனடியாக வடிக்க வேண்டும்!” : அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்!
-
“உலகத்திலேயே முதன்முறையாக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம்!” : உதயநிதி பெருமிதம்!