India
கரையான்களுக்கு இரையான சொந்த வீடு கனவு.. ரூ.5 லட்சத்தை பறிகொடுத்த பன்றி வியாபாரி.. ஆந்திராவில் சோகம்!
ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ளது மயிலாபுரம் என்ற கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த பிஜிலி ஜமாலயா என்பவர் பன்றி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்குச் சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்பது நெடுநாள் கனவாக இருந்தது.
இதற்காக பிஜிலி ஜமால்யா தனது ஆடம்பர செலவுகளை எல்லாம் புறந்தள்ளிவிட்டு பன்றி வியாபாரத்தில் கிடைக்கும் பணத்தின் சிறு பகுதியை மனைவியிடம் கொடுத்து சிறுக சிறுக சேமித்து வந்துள்ளார். இந்த பணத்தை ஒரு பழைய இரும்பு பெட்டியில் வைத்து சேமித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், வியாபாரத்தில் கிடைத்த ஒரு லட்சம் ரூபாயை இந்த இரும்பு பெட்டியில் வைப்பதற்காக, பெட்டியைத் திறந்துள்ளார். அப்போது அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. இவர் பல மாதங்களாக சிறுக சிறுக சேமித்து வைத்திருந்த ரூபாய் 5 லட்சத்தையும் கரையான்கள் அரித்திருப்பதைக் கண்டு, அப்படியே சத்தமாக அழுத படி தரையில் சரிந்து விழுந்தார்.
இது பற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் பிஜிலி ஜமால்யாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது "பிஜிலி ஜமால்யா வீடு கட்டுவதற்காகச் சேமித்து வைத்திருந்த பணம் என்றும், எங்களிடம் வங்கி கணக்கு இல்லாததால் பழைய இரும்பு பெட்டியில் பணத்தைச் சேமித்து வந்ததாகவும்" போலிசாரிடம் அவர் கூறினார். பின்னர் போலிஸார், "முறைகேடு பணமாக இல்லாமல் இருந்தால் உங்களுக்கு உதவுவதாக" அவரிடம் தெரிவித்திருக்கிறார்கள்.
Also Read
-
“3 ஃபைல் இருக்குனா வெளியிட வேண்டியதுதானா.. கேள்விக்கு பதிலளிக்க திராணி இல்லை” - செந்தில் பாலாஜி காட்டம்!
-
இடதுசாரிகளா? அதிகாரிகளா? யார் வேண்டும் : முதலமைச்சர் விஜய்க்கு கேள்வி எழுப்பிய பெ.சண்முகம்!
-
‘மகளைக் காதலித்ததால் இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்.. கூலிப்படையை ஏவி தவெக நிர்வாகியின் வெறிச்செயல்’
-
நெஞ்சத்தைக் கனக்கச் செய்கின்றன : உதவியாளராகப் பணியாற்றிய ஹரிகிருஷ்ணன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
“Comeback கொடுப்பதில் நாம் Specialist.. புதுமுகங்களுக்கு பொறுப்பு” : செயற்குழுவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!