India
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி மூலம் ரூ.20 லட்சம் கோடியை ஈட்டிய மத்திய பாஜக அரசு.. அதிர்ச்சி ரிப்போர்ட்!
பா.ஜ.க ஆட்சிக்கு வந்தது முதல் கடந்த ஆறரை ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் மீது கூடுதலாக விதிக்கப்பட்ட கலால் வரி மூலம் 20 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு வசூலித்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
உயர்த்தப்பட்ட இந்த மோடி வரியைக் குறைத்தால் பெட்ரோல் விலை 62 ரூபாயாகவும், டீசல் விலை 47 ரூபாயாக குறையும் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. இதன் மூலம் உயர்ந்து வரும் விலைவாசியும் பெருமளவுக்குக் குறையும் என்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பவன்கேரா தெரிவித்துள்ளார்.
2014ஆம் ஆண்டு மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 108 டாலருக்கு விற்கப்பட்டது. அப்போது பெட்ரோல் விலை 71 ரூபாய் 51 காசுகளாகவும், டீசல் விலை 57 ரூபாய் 28 காசுகளாகவும் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது, ஒரு பேரல் கச்சா எண்ணெய் 56 டாலராக இருக்கும் போது பேட்ரோல் விலை நூறு ரூபாயை நெறுங்கிவிட்டதாகக் குறிப்பிட்டார். 2016 ஆம் ஆண்டு பெட்ரோல் மீது ரூ.19.73 விதிக்கப்பட்ட கலால் வரியை மத்திய அரசு இன்று ரூ.32 98 காசுகளாக உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!