India
கச்சா எண்ணெய் விலை குறைந்த போதும் பெட்ரோல்-டீசல் விலை உயர்வது ஏன்? : மோடி அரசுக்கு திருச்சி சிவா கேள்வி!
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுவது ஏன் என்று கழக உறுப்பினர் திருச்சி சிவா கேள்வி எழுப்பினார்.
இது குறித்து 10.2.2021 அன்று மாநிலங்களவையில் கழகக் குழுத் தலைவர் திருச்சி சிவா எழுப்பிய கேள்வி வருமாறு:-
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுதுறை அமைச்சர் கீழ்க்கண்ட கேள்விக்கு பதில் அளிப்பாரா? (அ) 2020-21ஆம் ஆண்டில் அரசுக்கு எந்த பல்வேறு விலைகளுக்கு கச்சா எண்ணெய் கிடைக்கப்பெற்றது?
(ஆ) கச்சா எண்ணெய் விலை குறைந்த போதும் பெட்ரோல் - டீசல் விலை உயர்ந்ததற்கான காரணங்களை காலாண்டு எண்ணெய் விலை விபரங்களோடு தெரிவிக்கவும். இவ்வாறு மாநிலங்களவைக் கழகக் குழுத் தலைவர் திருச்சி சிவா கேள்வி எழுப்பினார்.
இந்த கேள்விக்கு பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அளித்த பதில் வருமாறு:-
(அ) மற்றும் (ஆ) 2021ஆம் ஆண்டு இந்திய கச்சா எண்ணெய்யின் சராசரி மாதாந்திர விலை பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 20 - 19.90., மே 20 - 30.60., ஜூன் 20 - 40.63., ஜூலை 20 - 43.35., ஆக. 20 - 44.19., செப். 20 - 41.35., அக் 20 - 40.66., நவ. 20 - 43.34., டிச20 - 49.84., ஜன 21- 54.79., பிப். 21 (பிப்.2 வரை) 56.07 பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் 26.06.2010 முதல் மற்றும் 19.10.2014 முதல் சந்தை தீர்மானப்படி நிர்ணயிக்கப்படுகின்றன.
பொதுத்துறை எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை பற்றி ஆலோசனை செய்து உரிய முடிவுகள் எடுக்கின்றன. அவை விலையை உயர்த்துவது மட்டுமின்றி, சர்வதேச விலை மாற்றங்களுக்கு ஏற்ப குறைக்கவும் செய்கின்றன. இந்திய டாலர் பரிமாற்றத்தில் விலை ஏற்றம், இறக்கம் ஏற்படுகிறது. பொதுத்துறை எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல் - டீசல் சில்லறை விலையை மறு அமைப்பு செய்கின்றன.
16.6.2017 முதல் இது நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. மிகவும் வெளிப்படையாகவும், சிறப்பாகவும் நுகர்வோருக்கு துணை புரிவதற்காகவும் இந்த முறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலளித்தார்.
Also Read
-
“ஒருவேளை விஜய் வட இந்தியாவில் பிறந்திருந்தால்...” - கழக மாணவரணி செயலாளர் ராஜீவ்காந்தி தாக்கு!
-
முதலமைச்சருக்கு நன்றி : 'நான் முதல்வன் திட்டத்தில் பயின்று இஸ்ரோவுக்கு செல்லும் அரசுப்பள்ளி மாணவர் !
-
நிதி நிறுவன மோசடி... பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு !
-
அகமதாபாத் விமான விபத்து : விபத்துக்கு விமானிகள் காரணம் என்பதை ஏற்கமுடியாது... விமானிகள் சங்கம் காட்டம் !
-
சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 36.08 லட்சம் உதவித்தொகை... வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி!