India
டிராக்டர் பேரணி எதிரொலி: விவசாயிகளுக்கு பெட்ரோல், டீசல் தர உ.பி., ஹரியானா பாஜக அரசு மறுப்பதாக புகார்!
டெல்லியில் நாளை மறுநாள் விவசாயிகள் நடத்தவிருக்கும் டிராக்டர் பேரணிக்கான பாதை இன்று இறுதி செய்யப்பட உள்ளது.
டெல்லி, ஹரியானா போலிஸார் டிராக்டர் பேரணிக்கான முதற்கட்ட அனுமதி வழங்கி இருப்பதாக நேற்று விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து எந்த எந்த சாலைகளில் எவ்வளவு தூரம் டிராக்டர் பேரணி நடத்த அனுமதிக்கப்படும் என்பது தொடர்பாக இன்று இறுதி செய்யப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதற்காக விரிவான வரைபடங்களைத் தரும்படி போலிஸார் கேட்டுள்ளனர். அவை இன்று டெல்லி போலிஸுக்கு வழங்கப்பட உள்ளது. அதன் பிறகு எந்தெந்த சாலைகளில் எவ்வளவு தூரத்திற்கு பேரணி நடத்த அனுமதிப்பது என்பது தொடர்பாக போலீசார் இறுதி செய்து அனுமதி வழங்க உள்ளனர்.
தற்போது சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட டிராக்டர்கள் டெல்லியில் அணிவகுக்க திட்டமிடப்பட்டுள்ளது. சுமார் 100 கிலோ மீட்டர் தூரத்திற்கு பேரணி நடைபெறும் என்று விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து டிராக்டர்கள் டெல்லி நோக்கி சென்று கொண்டிருக்கின்றன.
இதற்கிடையே உத்தரப் பிரதேசம், ஹரியாணா மாநிலங்களில் பல இடங்களில் டிராக்டர்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்கக்கூடாது என்று அந்த மாநில அரசுகள் தடைவிதித்துள்ளதாக கூறப்படுகிறது. பல பெட்ரோல் பங்குகளில் நேற்று முதல் டிராக்டர்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்க மறுப்பதாக விவசாயிகள் புகார் கூறுகின்றனர்.
Also Read
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!