India
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு தபால் வாக்கு.. நடப்பு ஆண்டு முதல் அமலாகிறது - வெளியுறவுத்துறை ஒப்புதல்!
தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தபால் மூலம் வாக்களிக்கும் திட்டத்துக்கு வெளியுறவுத்துறை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஆண்டே இந்த திட்டத்தை செயல்படுத்த அரசு தேர்தல் விதிமுறைகளில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையம் மத்திய சட்டத்துறையைக் கேட்டுக் கொண்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் வெளிநாடு வாழ் இந்தியர்களும் வாக்களிக்கும் விதமாக தேர்தல் விதிமுறைகள் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையம் மத்திய சட்டத்துறைக்கு கடிதம் எழுதி இருந்தது. அதை தொடர்ந்து வெளியுறவுத்துறையின் ஒப்புதலையும் கேட்டிருந்தது. இதற்கு பதில் அளித்துள்ள வெளியுறவுத்துறை இந்த திட்டத்தை அனுமதிக்கலாம் என்று ஒப்புதல் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளது.
தேர்தல் ஆணையம் மத்திய சட்டத்துறைக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ள தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களுக்கு முன்பாக தேர்தல் விதிமுறைகளில் உரிய திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்த மாநிலங்களில் சுமார் ஒரு லட்சத்து 17 ஆயிரம் பேர் வாக்காளர்களாக பதிவு செய்திருக்கிறார்கள்.
அவர்களுக்கு பாரம் 12 மூலம் தபால் வாக்களிக்க அனுமதி வழங்க விதிமுறைகளில் திருத்தம் தேவை என்று கூறியுள்ளது. மத்திய அரசு அனுமதி அளித்தால் வரும் 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தபால் மூலம் வாக்களிக்கும் நடைமுறையை செயல்படுத்த தேர்தல் ஆணையம் தயாராகிவருகிறது.
Also Read
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!