India
புத்தாண்டு பிறந்த போது மோடிக்கு எதிராக கோஷமிட்ட விவசாயிகள்.. 37வது நாளாக தொடரும் போராட்டம்!
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக உள்ள விவசாய விரோத சட்டங்களான வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியின் எல்லைகளில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் 37வது நாளாக தொடர்கிறது.
நேற்று முன் தினம் மத்திய அரசின் அழைப்பின் பேரில் நடைபெற்ற 6ம் கட்ட பேச்சு வார்த்தையும் தோல்வியிலேயே முடிந்துள்ளது. இதன் காரணமாக சட்டங்களை திரும்ப பெறும் வரையில் போராட்டம் நீடிக்கும் என விவசாயிகளும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், 2021ம் ஆண்டு பிறந்ததை அடுத்து நள்ளிரவு 12 மணிக்கு டெல்லியின் தேசிய நெடுஞ்சாலைகளில் புத்தாண்டை பட்டாசு வெடித்து வரவேற்ற விவசாயிகள், மோடி அரசுக்கு எதிரான கோஷங்களையும் இட்டனர்.
மேலும், வருகிற ஜனவரி 4ம் தேதி நடைபெற இருக்கும் பேச்சு வார்த்தையின் போது வேளாண் சட்டங்களை திரும்பப் பெற முன்வரவேண்டும் என விவசாய சங்கங்கள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதோடு, அதற்கு மாற்றாக வேறு எந்த முடிவையும் ஏற்கப்போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
Also Read
-
அமைச்சர் சரத்குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் : தி.மு.க. மாணவரணி திட்டவட்டம்!
-
மீண்டும் மதமாற்ற தடைசட்டமா?; பா.ஜ.க அஜெண்டாவுக்கு வேலை பார்க்கும் த.வெ.க : தி.மு.க கண்டனம்!
-
‘பொறுப்பேற்று’ செயல்பட த.வெ.க அரசு மறுப்பதே, பிரச்சனைகள் அதிகரிக்கக் காரணம்! : கனிமொழி கண்டனம்!
-
“SofaModel அரசால் திணிக்கப்படும் இடைத்தேர்தல்.. மக்கள் பாடம் புகட்டுவார்கள்” - உதயநிதி ஸ்டாலின்!
-
டேக் டைவர்ஷன் என ஓடும் ரீல்ஸ் ஆட்சிக்கு.. மக்களே முற்றுப்புள்ளி வைப்பார்கள் - கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!