India
இந்தியாவில் 1 கோடியை தாண்டிய கொரோனா பாதிப்பு: 21நாள் போர் தோல்வி என பகிரங்கமாக ஒப்புக்கொள்ளுமா மோடி அரசு?
கொரோனா பாதிப்பால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 25 ஆயிரத்து 153 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனையடுத்து நாட்டின் முதல் கொரோனா தொற்று ஜனவரி 30ம் தேதி கண்டறியப்பட்டதில் இருந்து இது வரையில் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 4,825 ஆக அதிகரித்துள்ளது.
அதில், 95 லட்சத்து 50 ஆயிரத்து 712 பேர் குணமடைந்திருந்தாலும் இது வரையில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 171 பேர் கொரோனாவால் உயிரிழந்திருப்பது பேரதிர்ச்சியையும் பெரும் சோகத்தையும் நாட்டு மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 347 பேர் பலியாகியிருக்கிறார்கள்.
மேலும், 29 ஆயிரத்து 885 பேர் குணமடைந்ததை அடுத்து தற்போது 3 லட்சத்து 8 ஆயிரத்து 751 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
9 மாதங்களுக்கும் மேலாக ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா தொற்று அண்மைக்காலங்களாக குறைந்து வருவது மக்களிடையே மன ஆறுதலை அளித்திருந்தாலும், தினந்தோறும் பல்லாயிரக் கணக்கானோர் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தியின் ட்விட்டர் பதிவில், மோடி அரசின் திட்டமிடப்படாத ஊரடங்கால் 21 நாள் போரில் வெற்றி பெற முடியவில்லை என்றாலும், லட்சகணக்கானவர்களின் வாழ்வை அழித்துள்ளது என சாடியுள்ளார்.
முன்னதாக 1 கோடியே 78 லட்சத்துக்கு அதிகமான கொரோனா பாதிப்புகளை பெற்று அமெரிக்கா முதல் இடத்திலும் இந்தியா இரண்டாவது இடத்திலும் தொடர்ந்து நீடிக்கிறது.
Also Read
-
தொடர்ந்து 4 நாட்களாக சசிகாந்த் உண்ணாவிரத போராட்டம்.. முதலமைச்சரின் கோரிக்கைக்கு இணங்க போராட்டம் முடிவு!
-
"நயினார் நாகேந்திரன் தேவையில்லாமல் வாயை கொடுத்து மாட்டிக்கொள்கிறார்" - அமைச்சர் TRB ராஜா பதிலடி !
-
கச்சத்தீவு விவகாரம் : “இலங்கை அதிபரின் பேச்சு, இருநாட்டு உறவுக்கு எதிரானது” - CPI முத்தரசன் கண்டனம்!
-
முதலமைச்சரின் ஜெர்மனி பயணம் மூலம் ரூ.7020 கோடி முதலீடு... 15,320 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி !
-
மூப்பனாரை பிரதமராக்க முயன்றவர் கலைஞர்.... திடீரென்று தமிழ் வேடம் போட்ட நிர்மலா - முரசொலி விமர்சனம் !