India
இந்தியாவில் 1 கோடியை தாண்டிய கொரோனா பாதிப்பு: 21நாள் போர் தோல்வி என பகிரங்கமாக ஒப்புக்கொள்ளுமா மோடி அரசு?
கொரோனா பாதிப்பால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 25 ஆயிரத்து 153 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனையடுத்து நாட்டின் முதல் கொரோனா தொற்று ஜனவரி 30ம் தேதி கண்டறியப்பட்டதில் இருந்து இது வரையில் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 4,825 ஆக அதிகரித்துள்ளது.
அதில், 95 லட்சத்து 50 ஆயிரத்து 712 பேர் குணமடைந்திருந்தாலும் இது வரையில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 171 பேர் கொரோனாவால் உயிரிழந்திருப்பது பேரதிர்ச்சியையும் பெரும் சோகத்தையும் நாட்டு மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 347 பேர் பலியாகியிருக்கிறார்கள்.
மேலும், 29 ஆயிரத்து 885 பேர் குணமடைந்ததை அடுத்து தற்போது 3 லட்சத்து 8 ஆயிரத்து 751 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
9 மாதங்களுக்கும் மேலாக ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா தொற்று அண்மைக்காலங்களாக குறைந்து வருவது மக்களிடையே மன ஆறுதலை அளித்திருந்தாலும், தினந்தோறும் பல்லாயிரக் கணக்கானோர் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தியின் ட்விட்டர் பதிவில், மோடி அரசின் திட்டமிடப்படாத ஊரடங்கால் 21 நாள் போரில் வெற்றி பெற முடியவில்லை என்றாலும், லட்சகணக்கானவர்களின் வாழ்வை அழித்துள்ளது என சாடியுள்ளார்.
முன்னதாக 1 கோடியே 78 லட்சத்துக்கு அதிகமான கொரோனா பாதிப்புகளை பெற்று அமெரிக்கா முதல் இடத்திலும் இந்தியா இரண்டாவது இடத்திலும் தொடர்ந்து நீடிக்கிறது.
Also Read
-
“இஸ்லாமியர்களின் உரிமைக்காக முதல் ஆளாக குரல் கொடுப்பது தி.மு.க. தான்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்.23 அன்று வாக்குப்பதிவு! : இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
-
NDA-க்கு எதிராக முழங்கிய தமிழ்நாடு! : மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம்!
-
தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு! : தமிழ்நாடு அரசின் அதிரடி அறிவிப்பு!
-
“மக்களுக்காக மேலும் உழைக்க காத்திருக்கிறோம்!” : திருப்பத்தூரில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!