India
“விவசாயிகளின் 2ம் கட்ட போராட்ட அறிவிப்பால் டெல்லி நேஷனல் ஹைவே மூடல்” : 17ம் நாளாக தீவிரமடையும் போராட்டம்!
மத்திய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டெல்லி எல்லையில் கடந்த 17 நாட்களாக தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வேளாண் சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்காததால், 5ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததுள்ளது. இதனிடையே, ஜெய்ப்பூர் டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் மறியல் போராட்டம் அறிவித்துள்ளனர்.
இதனால், ராஜஸ்தான் மற்றும் ஹரியானா பகுதிகளிலிருந்து இந்த நெடுஞ்சாலையை நோக்கி விவசாயிகள் செல்லாமல் இருப்பதற்காக இப்பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் தற்போது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரிலிருந்து ஹரியானா மாநிலம் வழியாக டெல்லி செல்லும் முக்கிய தேசிய நெடுஞ்சாலையில் இன்று விவசாயிகள் மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மானேசர், குருகிராமம் எல்லையில் ஹரியானா போலிஸார் குவிக்கப்படுள்ளனர். டெல்லி எல்லைப்பகுதி மூடப்பட்டுள்ளது. அங்குள்ள சுங்கச்சாவடிகள் இன்று இயங்கவில்லை; குர்கான் பகுதியில் 2500 க்கும் மேற்பட்ட போலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோன்று ஆக்ரா - டெல்லி நெடுஞ்சாலை வழியாக டெல்லி வரக்கூடிய எல்லைப் பகுதிகளிலும், காசிப்பூர், சில்லா, குண்லி எல்லைகளிலும் போலிஸார் குவிக்கப்பட்டு அந்த எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக டெல்லிக்கு வரக்கூடிய முக்கிய எல்லைப்பகுதி அனைத்தும் இன்று காலை முதல் மூடப்பட்டுள்ளது.
ஏற்கனவே, டெல்லி எல்லைகளில் 100 கம்பனி மத்திய படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே போராட்டக்களத்தை நோக்கி அணி அணியாக, இந்திய ராணுவ படைகள் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. 14ம் தேதி அனைத்து மாநிலங்களிலும் ஆர்பாட்டம், மத்திய அரசு மற்றும் பா.ஜ.க அலுவலகங்களில் முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டமாக ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றும், அதற்கான தேதி ஒரிரு நாட்களில் முடிவு செய்யப்படும் என்றும் விவசாயிகள் கூறியுள்ளனர். விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைவதால் மத்திய மோடி அரசு வேளாண் சட்டத்தை திரும்ப பெறுவதைத் தவிர வேறுவழியில்லை என விவசாயிகள் கூறிவருகின்றனர்.
Also Read
-
ராமநாதபுரத்தில் பரபரப்பு : ரூ.50 லட்சம் லஞ்சம் கேட்ட சார்பதிவாளர் கையும் களவுமாகக் கைது!
-
”CSK நிர்வாகத்திற்கும் தோனிக்கும் பிரச்சனையா.. அஸ்வின் கிளப்பிய புதிய புயல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!”
-
ஓடி ஒளியாதீர்கள் CM Sir : மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு - கனிமொழி என்.வி.என்.சோமு கண்டனம்!
-
”இந்திய இளைஞர்கள் உருவாக்கிய ’காக்ரோச் ஜனதா கட்சி’ - CJP.. அதிரவைக்கும் காரணங்கள்” - முழு விவரம் அறிக!
-
மீண்டும் ‘வந்தே மாதரம்’ முதலில்... தமிழ்த்தாய் வாழ்த்தை பின்னுக்குத் தள்ளிய தவெக அரசு : குவியும் கண்டனம்!