India
தாங்கள் சாப்பிடவிருந்த உணவுத் தட்டை தொட்ட தலித் இளைஞரை அடித்துக்கொன்ற ஆதிக்க சாதியினர்!
மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில், விருந்தில் வைக்கப்பட்டிருந்த உணவைத் தொட்ட 25 வயது தலித் இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில் இருந்து 450 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கிஷான்பூர் கிராமம். கடந்த டிசம்பர் 7ம் தேதி இந்த கிராமத்தில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விருந்து முடிந்தபின் சுத்தம் செய்வதற்காக தேவராஜ் அனுராகி என்ற தலித் இளைஞர் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார். விருந்தில் வைக்கப்பட்டிருந்த உணவை தேவராஜ் அனுராகி சாப்பிட்டதை கண்ட பூரா சோனி, சந்தோஷ் பால் ஆகிய ஆதிக்கசாதியைச் சார்ந்தவர்கள் தேவராஜை கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து போலிஸ் எஸ்.பி சச்சின் சர்மா கூறுகையில், தேவராஜை தாக்கிக் கொன்ற பூரா சோனி, சந்தோஷ் பால் இருவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
2,429 பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நாளை விரிவாக்கம் : 3.6 லட்சம் மாணவர்கள் பயன்!
-
முதலமைச்சரின் உதவி மையம் : திடீரென ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
TNPSC Group 1 : 89 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
19 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் : திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“சென்னை இதழியல் நிறுவனம்!” : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!