India
தாங்கள் சாப்பிடவிருந்த உணவுத் தட்டை தொட்ட தலித் இளைஞரை அடித்துக்கொன்ற ஆதிக்க சாதியினர்!
மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில், விருந்தில் வைக்கப்பட்டிருந்த உணவைத் தொட்ட 25 வயது தலித் இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில் இருந்து 450 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கிஷான்பூர் கிராமம். கடந்த டிசம்பர் 7ம் தேதி இந்த கிராமத்தில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விருந்து முடிந்தபின் சுத்தம் செய்வதற்காக தேவராஜ் அனுராகி என்ற தலித் இளைஞர் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார். விருந்தில் வைக்கப்பட்டிருந்த உணவை தேவராஜ் அனுராகி சாப்பிட்டதை கண்ட பூரா சோனி, சந்தோஷ் பால் ஆகிய ஆதிக்கசாதியைச் சார்ந்தவர்கள் தேவராஜை கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து போலிஸ் எஸ்.பி சச்சின் சர்மா கூறுகையில், தேவராஜை தாக்கிக் கொன்ற பூரா சோனி, சந்தோஷ் பால் இருவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!