India
கடும் குளிரிலும் 11வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்: திட்டமிட்டபடி டிச.,8ல் நாடுதழுவிய போராட்டம்!
மோடி அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் 11வது நாளை எட்டியுள்ளது.
டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் விவசாயிகள் போராட்டம் நடத்துவதற்கு அரசு அனுமதி மறுத்ததால், டெல்லி புறநகர் பகுதியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தைகளில் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்காமல் மத்திய மோடி அரசு பிடிவாதமாக இருந்து வருகிறது.
தங்களுடைய எதிர்காலமும் இந்திய மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக கோரிக்கைகளை அரசு ஏற்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராடி வருகின்றனர்.
ஹரியானா, உ.பி எல்லைகளில் நெடுஞ்சாலைகளை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் அடுத்த கட்ட திட்டம் குறித்து இன்று பிற்பகல் விவசாய சங்க கூட்டமைப்பு ஆலோசனை நடத்தவுள்ளது. 9 ஆம் தேதி மத்திய அரசு நான்காம் கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இதனிடையே, டிசம்பர் 8ஆம் தேதி நாடுதழுவிய வேலை நிறுத்த போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று விவசாய சங்கங்கள் கூறியுள்ளன. பல்வேறு அரசியல் கட்சிகளும் விவசாயிகளின் போராட்டத்துக்கு தங்களது ஆதரவினைத் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
நேஷனல் ஹெரால்டு வழக்கு : பா.ஜ.கவின் ஆணவத்துக்கு அடி கொடுத்த நீதிமன்றம் - முரசொலி!
-
“ஒன்றிய விளையாட்டுத் துறையில் 21% நிதியை பயன்படுத்தாதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
ரூ.718 கோடி முதலீட்டில் 663 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! : முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“ஏழை மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கக்கூடியது VB-G RAM G முன் வடிவு!” : பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
“சுய உதவிக்குழுக்களின் தயாரிப்பு பொருட்கள், இதுவரை சுமார் ரூ.690 கோடிக்கு விற்பனை!” : துணை முதலமைச்சர்!