India
கடும் குளிரிலும் 11வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்: திட்டமிட்டபடி டிச.,8ல் நாடுதழுவிய போராட்டம்!
மோடி அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் 11வது நாளை எட்டியுள்ளது.
டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் விவசாயிகள் போராட்டம் நடத்துவதற்கு அரசு அனுமதி மறுத்ததால், டெல்லி புறநகர் பகுதியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தைகளில் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்காமல் மத்திய மோடி அரசு பிடிவாதமாக இருந்து வருகிறது.
தங்களுடைய எதிர்காலமும் இந்திய மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக கோரிக்கைகளை அரசு ஏற்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராடி வருகின்றனர்.
ஹரியானா, உ.பி எல்லைகளில் நெடுஞ்சாலைகளை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் அடுத்த கட்ட திட்டம் குறித்து இன்று பிற்பகல் விவசாய சங்க கூட்டமைப்பு ஆலோசனை நடத்தவுள்ளது. 9 ஆம் தேதி மத்திய அரசு நான்காம் கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இதனிடையே, டிசம்பர் 8ஆம் தேதி நாடுதழுவிய வேலை நிறுத்த போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று விவசாய சங்கங்கள் கூறியுள்ளன. பல்வேறு அரசியல் கட்சிகளும் விவசாயிகளின் போராட்டத்துக்கு தங்களது ஆதரவினைத் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
காணாமல் போன மோடி : காணவில்லை என சுவரொட்டி அடித்த மணிப்பூர் மக்கள்!
-
பிரசாரத்துக்கு சென்ற பாஜக வேட்பாளருக்கு எதிர்ப்பு: சம்பவ இடத்திலேயே விவசாயி பரிதாப பலி -குவியும் கண்டனம்!
-
“பெண்கள் என்றால் எதை வேண்டுமானாலும் பேசலாமா ?” - சவுக்கு மீடியா சங்கருக்கு மகளிர் காங்கிரஸ் கண்டனம் !
-
பாலியல் வழக்கு : தொடர்ந்து எழும் புகார்... கர்நாடக முன்னாள் அமைச்சர் HD ரேவண்ணா அதிரடி கைது !
-
புகழ்பெற்ற மல்யுத்த வீரரை வீழ்த்திய வீராங்கனை... தோல்வியே சந்திக்காத இந்திய பெண்ணை கௌரவித்த Google!