India
வேளாண் சட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு: அர்ஜுனா, பத்ம விருதுகளை திருப்பியளிக்க பஞ்சாப் வீரர்கள் முடிவு!
வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவில்லை என்றால் டெல்லியின் அனைத்து எல்லைகளையும் முற்றுகையிட்டு போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாக விவசாயிகள் அறிவிப்பு.
நேற்று நடத்திய பேச்சுவார்த்தையில் மத்திய அரசு முன்வைத்த பேச்சுவார்த்தை குழு கோரிக்கையை விவசாய சங்கங்கள் முற்றிலுமாக நிராகரித்துள்ளன. இதனிடையே நாளை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைத்துள்ளது. இது தொடர்பாக விவசாய சங்க கூட்டமைப்பினர் இன்று கூடி ஆலோசனை நடத்தினர்.
நாளைய பேச்சுவார்த்தையில் வேளாண் சட்டங்களை முழுமையாக திரும்பப் பெற மத்திய அரசு முன்வரவில்லை என்றால் டெல்லியின் அனைத்து எல்லைகளையும் முற்றுகையிட்டு போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாக விவசாய சங்க கூட்டமைப்பு முடிவு செய்திருக்கிறது.
இதனிடையே பஞ்சாபைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் 3 பேர் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அர்ஜூனா மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை திரும்ப வழங்குவதாக அறிவித்துள்ளனர்.
பத்மஸ்ரீ விருது பெற்ற மல்யுத்த வீரர் கத்தார் சிங், ஒலிம்பிக் தங்கப் பதக்கம் பெற்ற ஹாக்கி வீரர் அர்ஜுனா விருது பெற்ற குருமெயில் சிங், முன்னாள் ஹாக்கி கேப்டன் ராஜ்பீர் கவுர், அர்ஜுனா விருது பெற்ற கூடைப்பந்து வீரர் சஷன் சிங் ஆகியோர் விருதுகளை திரும்பப் தரப்போவதாக அறிவித்துள்ளனர்.
இவர்களுடன் சேர்ந்து மேலும் பல விளையாட்டு வீரர்கள் விருதுகளை திரும்ப வழங்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Also Read
-
"டீசல் பேருந்துகளின் பயன்பாடு குறைக்கப்படாது" : அமைச்சர் சிவசங்கர் உறுதி!
-
”ஒன்றிய பா.ஜ.க அரசின் கைப்பாவையாக மாறும் தேர்தல் ஆணையம்” : முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம்!
-
SIR நடத்துவதை ஒத்தி வைக்க வேண்டும் : நடைமுறை சிக்கல்களை விளக்கி தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுத்த திமுக!
-
குடும்ப அரசியலைப் பற்றி பேச பா.ஜ.கவுக்கு தகுதியே இல்லை : வெளுத்து வாங்கிய முரசொலி!
-
SAAF தொடரில் பதக்கம் வென்று அசத்திய தமிழர்கள்.. ரூ.40.5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கி துணை முதல்வர் பாராட்டு!