India
பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் : ஆர்.ஜே.டி - காங்கிரஸ் கூட்டணி முன்னிலை! #BiharElectionResults
பீகார் மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் 29ம் தேதி முடிவடைய உள்ள நிலையில், அம்மாநிலத்திற்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு 243 தொகுதிகளுக்கும் கடந்த அக்டோபர் 28 மற்றும் நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
நடந்து முடிந்த தேர்தலில், 57.05% மக்கள் வாக்களித்துள்ள நிலையில், பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று துவங்கியது. தற்போது முதற்கட்டமாக 38 மாவட்டங்களில் உள்ள 55 மையங்களில் தொடங்கியது.
இதனிடையே முதலில் தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு, மற்ற வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றனர். பீகாரில் ஆட்சி அமைக்க 122 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெறவேண்டும்.
பீகார் மாநிலத்தில் நான்குக்கும் அதிகமான கூட்டணி களத்தில் இருந்தாலும், நிதிஷ்குமார் தலைமையிலான பா.ஜ.க கூட்டணிக்கும், ஆர்.ஜே.டியின் தேஜஸ்வி யாதவ் தலையிலான மெகா கூட்டணிக்கும் இடையே தான் நேரடி போட்டி நிலவுகிறது. இதனால் ஆட்சியை கைப்பற்றப்போவது யார் என பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் தற்போது வெளியான தகவலின் படி, ஆர்.ஜே.டி+ காங்கிரஸ் கூட்டணி 80 இடங்களில் முண்னிலை உள்ளது. ஜே.டி.யு + பாஜக கூட்டணி 60 இடங்களில் முண்னிலை உள்ளது. லோக் ஜனதா கட்சி 04 இடங்களையும், மற்றவை 03 இடங்களையும் பெற்றுள்ளது.
Also Read
-
‘ஊழலை ஒழிக்க வந்த உத்தமன்.. தவெக-வின் Party Fun மிரட்டல்கள்.. வைரலான வீடியோ.. தீவிர நடவடிக்கை தேவை!’
-
“தெரிந்தும் தெரியாதது போல் நாடக ஆட்சி நடத்துகிறீர்களா CM Sir?” : முன்னாள் சபாநாயகர் அப்பாவு கண்டனம்!
-
“நீட் தேர்வு ரத்துதான் நிரந்தரத் தீர்வு; அதைத்தான் நாடு எதிர்பார்க்கிறது!” : முரசொலி தலையங்கம்!
-
இரண்டரை மாதத்தில் ரூ.20 ஆயிரம் கோடி கடன்.. - முதல்வர் விஜயை விளாசிய முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன்!
-
நீட் தேர்வுக்கு எதிராக சென்னையில் தொடரும் போராட்டம்.. ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி.. கடும் தள்ளுமுள்ளு!