India
கொரோனாவில் இருந்து மீண்டுவிட்டால் மீண்டும் பாதிப்பு வராது என இருக்காதீர் - ஐசிஎம்ஆர் இயக்குநர் எச்சரிக்கை
இந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரையில் 76 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருந்தாலும் அதில் 67 லட்சத்து 95 ஆயிரத்து 103 பேர் குணமடைந்திருக்கிறார்கள். நேற்று ஒரே நாளில் 61 ஆயிரத்து 775 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார்கள். அதேப்போல பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் குறைந்துக் கொண்டே வருவது ஆறுதலான செய்தியாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு மீண்டும் வைரஸ் தொற்று ஏற்படாது என்பதை மக்கள் நம்பக்கூடாது என ஐசிஎம்ஆர் இயக்குநரான மருத்துவர் பல்ராம் பார்கவா நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறியுள்ளார்.
அதில், கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்படுவது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரையில் சேகரித்த தரவுகளின் அடிப்படையில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் உடலில் 3 முதல் 5 மாதங்கள் வரையிலேயே நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும்.
90 நாட்களுக்கு பிறகு குணமடைந்தவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையத் தொடங்கினால் மீண்டும் வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் ஏற்படும். ஆகவே குணமடைந்துவிட்டதால் மீண்டும் கொரோனா தொற்று ஏற்படாது என்ற கற்பிதங்களை நம்பி இருக்காமல் முறையாக கொரோனா தடுப்பு நெறிமுறைகளான முகக்கவசம் அணிந்து, கிருமி நாசினி உபயோகித்து தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது அவசியமாகும் என பல்ராம் பார்கவா தெரிவித்தார்.
Also Read
-
வக்பு சட்டத்திருத்தம் : “முழுமையான தடைக்கு அடுத்த கட்ட சட்டப் போராட்டங்கள் அவசியம் ஆகிறது” - முரசொலி!
-
“‘அமித்ஷாவே சரணம்’ என்று சரண்டர் ஆகிவிட்டார் பழனிசாமி!” : தமிழ்நாட்டு துரோகிகளுக்கு முதலமைச்சர் கண்டனம்!
-
“தலைமுறை தலைமுறையாக போராடி பெற்ற உரிமைகளை, நாமே பறிபோக அனுமதிக்கலாமா?” : கரூரில் முதலமைச்சர் எழுச்சியுரை!
-
“திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்தது; தமிழ்நாட்டிற்கான வழி திறந்தது!” : கனிமொழி எம்.பி திட்டவட்டம்!
-
”திமுக-வை எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனல் பேச்சு!