India
டி.ஆர்.பியை விலைக்கு வாங்கி மோசடியில் ஈடுபட்ட ‘ரிபப்ளிக் டி.வி’ - மும்பை போலிஸ் வழக்குப்பதிவு!
டி.ஆர்.பி ரேட்டிங்கை போலியாக அதிகரித்துக் காட்டி மோசடியில் ஈடுபட்டதாக ரிபப்ளிக் டி.வி உள்ளிட்ட 3 தொலைக்காட்சிகள் மீது மும்பை போலிஸ் வழக்குப் பதிவு செய்துள்ளது.
விளம்பர வருவாயை அதிகரிப்பதற்காக, டி.ஆர்.பி ரேட்டிங்கை அதிகமாகக் காட்டும் வகையில் வீடுகளுக்கு வழங்கப்படும் செட்ஆப் பாக்ஸில் தகிடுதத்தம் செய்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மும்பை போலிஸ் கமிஷனர் பரம் பீர் சிங் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாகப் பேசிய மும்பை போலிஸ் கமிஷனர் பரம் பீர் சிங், “டி.ஆர்.பிக்காக பெரிய தொகையை தரகர்களிடம் கொடுத்து தங்கள் சேனலை எல்லா நேரத்திலும் வீடுகளில் ஆன் செய்து வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
ஏனெனில், ஆங்கிலம் அறியாத சாதாரண குடும்பங்களில் உள்ள தொலைக்காட்சிகளில் ஆங்கில தொலைக்காட்சி சேனல்கள் மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பதாக தரவுகளில் பதிவாகியுள்ளது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் வீடுகளில் செட்டாப் பாக்ஸை இன்ஸ்டால் செய்யும் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர். டி.ஆர்.பி மோசடியில் ஈடுபட்டதாக ரிபப்ளிக் டிவி உள்ளிட்ட 3 சேனல்கள் மீது மும்பை போலிஸ் மோசடி வழக்குப் பதிவு செய்துள்ளது ” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
”மேகதாது அணை உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது.. இப்போதாவது வாய் திறப்பாரா முதல்வர்” : கே.என்.நேரு கேள்வி!
-
தமிழ்நாடெங்கும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: திமுக இளைஞரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்கள் என்ன?
-
“மனிதநேயமற்ற கொடூரமான படுகொலை” : பெ.சண்முகம் கடும் கண்டனம்!
-
”கோவை சிறுமி கொலை.. கேள்விக்குறியான மாநில சட்டம் ஒழுங்கு.. நீதி வேண்டும்”: எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!
-
”தமிழ்நாட்டை உலுக்கிய கோவை சிறுமி கொலை.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. மவுனத்தில் முதல்வர் விஜய்!”