India
டி.ஆர்.பியை விலைக்கு வாங்கி மோசடியில் ஈடுபட்ட ‘ரிபப்ளிக் டி.வி’ - மும்பை போலிஸ் வழக்குப்பதிவு!
டி.ஆர்.பி ரேட்டிங்கை போலியாக அதிகரித்துக் காட்டி மோசடியில் ஈடுபட்டதாக ரிபப்ளிக் டி.வி உள்ளிட்ட 3 தொலைக்காட்சிகள் மீது மும்பை போலிஸ் வழக்குப் பதிவு செய்துள்ளது.
விளம்பர வருவாயை அதிகரிப்பதற்காக, டி.ஆர்.பி ரேட்டிங்கை அதிகமாகக் காட்டும் வகையில் வீடுகளுக்கு வழங்கப்படும் செட்ஆப் பாக்ஸில் தகிடுதத்தம் செய்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மும்பை போலிஸ் கமிஷனர் பரம் பீர் சிங் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாகப் பேசிய மும்பை போலிஸ் கமிஷனர் பரம் பீர் சிங், “டி.ஆர்.பிக்காக பெரிய தொகையை தரகர்களிடம் கொடுத்து தங்கள் சேனலை எல்லா நேரத்திலும் வீடுகளில் ஆன் செய்து வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
ஏனெனில், ஆங்கிலம் அறியாத சாதாரண குடும்பங்களில் உள்ள தொலைக்காட்சிகளில் ஆங்கில தொலைக்காட்சி சேனல்கள் மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பதாக தரவுகளில் பதிவாகியுள்ளது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் வீடுகளில் செட்டாப் பாக்ஸை இன்ஸ்டால் செய்யும் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர். டி.ஆர்.பி மோசடியில் ஈடுபட்டதாக ரிபப்ளிக் டிவி உள்ளிட்ட 3 சேனல்கள் மீது மும்பை போலிஸ் மோசடி வழக்குப் பதிவு செய்துள்ளது ” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“இளைஞர்களின் கைகளுக்கு இந்த ஆவணத்தைக் கொண்டு சேர்ப்பீர்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
தமிழ்நாடு முழுவதும் 16,248 சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் 6,78,034 பேர் பயன்!” : அமைச்சர் மா.சு தகவல்!
-
“ஆணவத்தால், திமிரால், அளவுக்கு மீறிய தான்தோன்றித் தனத்தால் தோற்றவர் பழனிசாமி” : முரசொலி கடும் விமர்சனம்!
-
பேட்மிண்டன் ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் 2025 : தங்கப்பதக்கம் வென்ற தீக்ஷாவுக்கு துணை முதல்வர் பாராட்டு!
-
ஒடிசா தேர்தல் முதல் ராமேஸ்வரம் கஃபே வரை.. “தமிழன் என்றால் அவ்வளவு கேவலமா?” -பட்டியலிட்டு RS பாரதி ஆவேசம்!