India
“ஜனநாயகத்திலிருந்து கருத்து வேறுபாட்டை பிரிக்க முடியாது” : CAA-வுக்கு எதிரான வழக்கில் நீதிபதிகள் கருத்து!
டெல்லியில் 101 நாட்களாக நடந்த ஷாஹின்பாக் போராட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான 3 நீதிபதிகள் தீர்ப்பை வழங்கினர்.
அப்போது, போராட்டங்கள் நடத்த அனைவருக்கும் உரிமை உண்டு. அதே நேரத்தில் பல நாட்களாக சாலையை தொடர்ந்து ஆக்கிரமித்து போராட்டம் நடத்தியதை ஏற்க முடியாது. போராட்டத்துக்கு என்று ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
மேலும் தீர்ப்பில், “அரசியல் சாசனம் என்பது சட்டம் இயற்றுவது, நிர்வாகம், நீதித்துறை ஆகியவற்றை ஒருங்கே கொண்டது. நாடாளுமன்றம் குடியுரிமை சட்டத்தை இயற்றியுள்ளது. ஆனால் அதற்கான நீதித்துறையின் சட்ட அங்கீகாரம் இன்னும் வழங்கப்படவில்லை.
வழக்கு நிலுவையில் உள்ளது. ஜனநாயகத்திலிருந்து கருத்து வேறுபாட்டை பிரிக்க முடியாது. இரண்டும் ஒன்றோடுஒன்று கைகோர்த்துச் செல்பவை என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர். ஜனநாயகத்திலிருந்து கருத்து வேறுபாட்டை பிரிக்க முடியாது. இரண்டும் ஒன்றோடுஒன்று கைகோர்த்துச் செல்பவை” என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
Also Read
-
ஜனநாயகத்தின் மீது தாக்குதல்: முதல்வர்கள், அமைச்சர்கள் பதவி நீக்கம் மசோதாவுக்கு இந்தியா கூட்டணி எதிர்ப்பு
-
மோடி - அமித்ஷாவின் பிளாக்மெயில் மசோதா : எதிர்க்கட்சிகளை ஒடுக்க நினைக்கும் ஒன்றிய அரசு!
-
நீதித்துறையை விமர்சித்த சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு! : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
-
"முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் மிக பெரிய வரலாறு இது" - அமைச்சர் துரைமுருகன் பெருமிதம் !
-
”அரசாங்கத்தின் மூலதனம் பொதுப்பணித்துறை” : அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!