India
வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு: பா.ஜ.க அரசுக்கு தலையசைக்கும் எடப்பாடி அரசை பதவி விலகக் கோரி CPIM போராட்டம்!
வேளாண்சட்டதிருத்த மசோதாக்கள் நிறைவேற்றபட்டதை திரும்ப பெற வலியுறுத்தி சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், விவசாய சங்க பிரதிநிதிகள், இளைஞர்கள், பெண்கள், மாணவர் அமைப்பினர் என ஏராளமானோர் கலந்துகொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
விவசாயத்தையும் விவசாயிகளையும் சீரழிக்கும் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் எனவும் மத்திய பா.ஜ.க அரசுக்கு தலையசைக்கும் மாநில அரசு பதவி விலகக் கோரியும் முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விவசாய சங்கங்கள் பொதுச் செயலாளரான சண்முகம், “விவசாயிகளுக்கு எதிரான இந்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் எனவும் நாடு முழுவதும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இதற்கு பா.ஜ.க அரசு எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை.
மசோதாக்களை திரும்பப் பெறும்வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம். வரும் செப்டம்பர் 25-ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலை உட்பட 500 இடங்களில் மிகப்பெரிய அளவில் சாலை மறியல் போராட்டதில் ஈடுபடுவோம்” என தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து கோட்டையை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற போராட்டக்காரர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். காவல்துறையினரையும் தாண்டி பேரணியாக சென்ற அவர்களை வலுக்கட்டாயமாக இழுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர் அமைப்பினர் முழக்கங்களை எழுப்பி எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
சிறிது நேரம் நீடித்த இந்த சாலை மறியலை தொடர்ந்து போராட்டக்காரர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு போலிஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டனர்.
Also Read
-
“மாற்றம் எனச் சொல்லி.. அண்டப் புளுகை, ஆதவ் அர்ஜுனா புளுகாக மாற்றிவிட்டார்களோ?” : இ.பரந்தாமன் கண்டனம்!
-
ஒரே நாளில்... கோவையை தொடர்ந்து மதுரை.. கொலை நகரமாகும் தூங்கா நகரம்... வேடிக்கை பார்க்கும் தவெக அரசு!
-
விபரீதமான விளையாட்டு... வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் 8 பள்ளி மாணவர்கள் கைது.. கள்ளக்குறிச்சியில் பரபர!
-
“ஒன்னு மின்வெட்டு, இரண்டு அரிவாள் வெட்டு.. இதான் தவெக ஆட்சி” : முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“வேங்கைவயல் விவகாரத்தில் நீலிக்கண்ணீர்... மன்னிப்புக் கேட்க தயாரா?” : வன்னி அரசுக்கு கோவி.செழியன் கேள்வி!