India
ஏ.டி.எம்-களில் 10,000 ரூபாய்க்கு மேல் பணம் எடுத்தால் OTP கட்டாயம் : SBI வங்கி அறிவிப்பு!
போலி ஏ.டி.எம் கார்டுகள் மூலம் ஏ.டி.எம். மையங்களில் இருந்து பணம் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அவ்வப்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
இந்த மோசடி வேலைகள் அண்மைக்காலமாக அதிகரித்து வருவதால் வாடிக்கையாளர்கள் மிகுந்த அச்சத்துக்கு ஆளாகியுள்ளனர். இது போன்ற மோசடிகள் தொடர்பாக வங்கிகளுக்கும் ஏராளமான புகார்கள் வந்துக் கொண்டிருப்பதால் புதிய நடைமுறை ஒன்றை செயல்படுத்தவுள்ளது பாரத ஸ்டேட் வங்கி.
அதன்படி, நாள் ஒன்றுக்கு பணம் எடுக்கும் அதிகபட்ச வரம்பை 40 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரமாக குறைத்ததோடு மட்டுமல்லாமல், 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஏ.டி.எமில் இருந்து பணம் எடுத்தால் ரகசிய எண்ணை (OTP) பயன்படுத்தும் முறையை அறிமுகப்படுத்தவுள்ளது.
ரூ.10,000க்கு மேல் பணம் எடுக்கும் போது வாடிக்கையாளரின் மொபைல் எண்ணுக்கு வரும் ரகசிய எண்ணை ஏ.டி.எம் இயந்திரத்தில் பதிவிட்ட பிறகே பணம் எடுக்க முடியும் என்றும் எஸ்.பி.ஐ. தெரிவித்துள்ளது.
மேலும், இந்த முறை எஸ்.பி.ஐ. ஏ.டி.எம்-ஐ பயன்படுத்தும் அதன் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பயன்படுத்திக்கொள்ள முடியும் என்றும், மற்ற வங்கி வாடிக்கையாளர்கள் பழைய முறையிலேயே பணம் எடுத்துக்கொள்ளலாம் என்றும் இந்த ஓடிபி முறை நாட்டின் அனைத்து எஸ்.பி.ஐ ஏ.டி.எம் மையங்களிலும் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
எனவே, எஸ்.பி.ஐ வங்கி வாடிக்கையாளர்ளகள் இனி ஏ.டி.எம்-களுக்கு பணம் எடுக்க செல்லும் போது, தங்களது செல்போனையும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
Also Read
-
கையை கட்டிக்கொண்டு இருக்க முடியுமா? : ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரிக் கேள்வி!
-
”தமிழ்நாட்டில் இரு மடங்கு அதிகரித்த பட்டு உற்பத்தி” : பெருமையுடன் சொன்ன அமைச்சர் தா.மோ.அன்பரசன்!
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!