India
“கொரோனா ஒழிந்துவிட்டது” - நாள்தோறும் 3,000 பேர் பாதிக்கப்படும் சூழலில் அறிவித்த பா.ஜ.க தலைவரால் சர்ச்சை!
“கொரோனா வைரஸ் ஒழிந்துவிட்டது. ஆனால், பா.ஜ.க பேரணி நடத்துவதைத் தடுக்கவே மம்தா பானர்ஜி ஊரடங்கு விதிக்கிறார்” என்று மேற்கு வங்க பா.ஜ.க தலைவர் திலிப் கோஷ் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தை எட்டி வருகிறது. இந்தியாவில் நாள்தோறும் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இன்றைய நிலவரப்படி 45 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் இதுவரை 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3,700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் 3,112 புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சூழவில் கொரோனா ஒழிந்துவிட்டது என்று மேற்கு வங்க மாநில பா.ஜ.க தலைவர் திலீப் கோஷ் பேசியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.
மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஹூக்ளி மாவட்டத்தில் பா.ஜ.க சார்பில் நேற்று பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பா.ஜ.க மாநிலத் தலைவர் திலீப் கோஷ், “கொரோனா வைரஸ் ஒழிந்துவிட்டது. ஆனால், பா.ஜ.கவின் வளர்ச்சியை தடுக்கும் நோக்கில், பேரணிகளை நடத்தவிடாமல் முதல்வர் மம்தா பானர்ஜி ஊரடங்கு விதிக்கிறார்.
ஊரடங்கு அமலில் இருப்பதால் பா.ஜ.க-வால் பொதுக்கூட்டங்கள், பேரணிகளை நடத்த முடியாமல் போகிறது. இனி நாமாகவே தேர்தல் பேரணிகளை நடத்த வேண்டியதுதான்” எனப் பேசியுள்ளார்.
Also Read
-
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு முதலில் விதை போட்டது கலைஞர் : பேரவையில் கோவி.செழியன் எம்.எல்.ஏ பேச்சு!
-
“Delimitation-ன் தொடக்கத்தில் கோலம் போட்டு விளையாடிக் கொண்டு இருந்தவர்தான் விஜய்!” : முரசொலி விமர்சனம்!
-
“நீட் தேர்வு எனும் உயிர்க் கொல்லியை ரத்து செய்ய வேண்டும்!” : தி.மு.க மாணவர் அணிச் செயலாளர் வீரமணி!
-
சூழ்ந்த மக்கள்.. செய்தி சேகரித்த பத்திரிகையாளர்.. மிரட்டிய தவெக அமைச்சரின் ஆதரவாளர்.. வைரலாகும் வீடியோ!
-
தொகுதி மறுவரையறை கூட்டம் எதற்காக? ; தவெக அரசை இயக்குவது? : அடுக்காடுக்காக கேள்விகளை எழுப்பிய கனிமொழி MP!