India

“இந்தியாவில் ஒரே நாளில் 95,735 பேர் பாதிப்பு; 1,172 பேர் பலி” : மோடி அரசின் தடுப்பு நடவடிக்கை என்ன ஆனது?

கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று.

கொரோனா வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உலக நாடுகள் திணறி வருகின்றன. இன்னும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் ஊரடங்கு தொடர்கிறது.

உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றுக்கு 28,025,181 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சுமார் 908,000 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர். அதேப்போல், உலக நாடுகளில் அதிகட்சமாக அமெரிக்காவில் மட்டும் 6,549,475 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 195,239 பேர் பலியாகினர்.

இந்நிலையில், இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 24 மணி நேரத்தில் 95,735 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார், 1,1172 பேர் பலியாகியுள்ளனர். இதனால், உலகளவில் கொரோனா பாதிப்பில் 3வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது பிரேசிலை முந்திக்கொண்டு 2வது இடத்தை பிடித்திருக்கிறது.

இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 44 லட்சத்தை தாண்டியுள்ளது. பலி 70 ஆயிரத்தை தாண்டியது. இதுவரை இந்தியாவில் 44,65,863 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலியானோர் எண்ணிக்கை 75,062 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய கணக்குப்படி, கடந்த நான்கு நாட்களாக உயிரிழப்பு ஆயிரத்துக்கு மேல் உள்ளது. உயிரிழப்பு 1.70% ஆக அதிகரித்துள்ளது. இதில், 34.71 லட்சம் பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.

Also Read: “மோடி அரசின் பிடிவாதத்தால் மாணவர்களின் கனவு பாழானது”: கொரோனா காரணமாக 26% மாணவர்கள் JEE தேர்வு எழுதவில்லை!