India
“அமெரிக்காவை விட அதிக பாதிப்பை சந்திக்கும் இந்தியா” : ஒரே நாளில் 77,266 பேர் பாதிப்பு- 1,057 பேர் பலி!
கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று.
கொரோனா வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உலக நாடுகள் திணறி வருகின்றன. இன்னும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் ஊரடங்கு தொடர்கிறது. உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றுக்கு 24,625,149 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சுமார் 835,627 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர்.
உலக நாடுகளில் அதிகட்சமாக அமெரிக்காவில் மட்டும் 6,046,634 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 184,796 பேர் பலியாகினர். அமெரிக்காவுக்கு அடுத்து பிரேசில் உள்ளது.
இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்தில் வைரஸ் தொற்றின் தீவிரம் தணியத் தொடங்கிய நிலையில், பிரேசில், இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் பாதிப்பு கடுமையாக அதிகரித்து வருகிறது. அதேப்போல் 4வது இடத்தில் இருந்த இந்தியா 3வது இடத்திற்குச் சென்றுள்ளது.
இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33 லட்சத்தை தாண்டியுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 77,266 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 1,057 பேர் ஒரே நாளில் பலியாகியுள்ளனர்.
இந்தியாவில் இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,87,500 -ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61,529 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சைப்பெற்று குணமானவர்கள் எண்ணிக்கை 25,23,772 ஆக உயர்ந்துள்ளது. தற்போது சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 7,04,348-லிருந்து 7,25,991 ஆக உள்ளது.
தற்போதைய கணக்குகள் படி குணமடைவோர் 76% ஆக உள்ளது. கொரோனாவால் நாள்தோறும் 50 ஆயிரம் பேருக்குப் பாதிப்பு என்பது நீடிக்கிறது. அதுமட்டுமல்லாது, கடந்த 20 நாட்களில் மட்டும் 13 லட்சம் பேருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய 4வது ஊரடங்கு குறித்த அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியிடப்பட உள்ளது. ஊரடங்கு தளர்வு குறித்து பேசும் மோடி அரசு கொரோனாவைக் கட்டுப்படுத்த மோடி அரசிடம் என்ன திட்டம் உள்ளது என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Also Read
-
திருமணத்துக்கு மறுப்பு : 3 நாட்கள் வன்கொடுமை செய்து சூடு போட்ட இளைஞர்-பாஜக ஆளும் உ.பி-யில் தொடரும் அவலம்!
-
“பிரஜ்வல் வீடியோவை நான்தான் பாஜக நிர்வாகியிடம் கொடுத்தேன்...” - அதிர்ச்சி வாக்குமூலம் கொடுத்த ஓட்டுநர் !
-
எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனத்தின் எதிரொலி: இறுதியாக வாக்குப்பதிவு விபரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!
-
இரக்கமற்ற பிரஜ்வால் ரேவண்ணா : ஓட்டம் பிடிக்க உதவிய பா.ஜ.க!
-
முறைகேடுக்கு வழிவகுக்கும் தேர்தல் ஆணையம்! :எச்சரிக்கும் முன்னாள் தேர்தல் ஆணையர் மற்றும் எதிர்க்கட்சிகள்!