India
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 31 லட்சத்தை தாண்டியது - மோடி அரசின் தடுப்பு நடவடிக்கை என்ன ஆனது?
உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றுக்கு 23,585,422 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சுமார் 812,517 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர். அதிகட்சமாக அமெரிக்காவில் மட்டும் 5,874,146 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 180,604 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு 31 லட்சத்தை தாண்டியது. இந்தியாவில் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31,06,349 ஆகவும், யிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 57,542 ஆக அதிகரித்துள்ளது. மேலும் குணமடைந்தோர் எண்ணிக்கை 23,38,036 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய கணக்குகள் படி குணமடைவோர் 76% ஆக உள்ளது.
கொரோனாவால் நாள்தோறும் 50 ஆயிரம் பேருக்குப் பாதிப்பு என்பது நீடிக்கிறது. அதுமட்டுமல்லாது, கடந்த17 நாட்களில் மட்டும் 11 லட்சம் பேருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த ஒரு மாதமாகத்தான் கொரோனா சோதனைகள் அனைத்து மாநிலங்களிலும் அதிக அளவில் நடத்தப்படுகிறது. தற்போது நாள் ஒன்றுக்கு ஐந்து லட்சத்துக்கு மேல் சோதனைகள் நடத்தப்பட்டுவருகிறது.
Also Read
-
“சேமிப்போம் சிறப்பாக வாழ்வோம் ” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலக சிக்கன நாள் வாழ்த்து!
-
“குறுவைப்பருவத்தில் 1,45,634 விவசாயிகளுக்கு ரூ.2,709 கோடி வழங்கப்பட்டுள்ளது!” : அமைச்சர் சக்கரபாணி தகவல்!
-
பள்ளிக்கரணை சதுப்புநிலம் - கட்டுமானங்களுக்கும் அனுமதி அளிக்கப்படுவதில்லை : தமிழ்நாடு அரசு விளக்கம்!
-
“சென்னையில் இதுவரை 5.38 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது!” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
பயிர்க்காப்பீட்டுத் திட்டம் : விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்க அமைச்சர் MRK உத்தரவு!