India
3 விமான நிலையங்களை ஜெர்மன் நிறுவனத்திடம் ஒப்படைக்க அதானி திட்டம் - Mr.மோடி இதுதான் சுயசார்பு இந்தியா?
பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு ஆட்சியமைத்ததில் இருந்தே நாட்டின் பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதையே குறியாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
இதனால் ஏராளமானோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொள்ளாமல் கார்ப்பரேட் முதலாளிகளான அம்பானி, அதானி குழுமத்திற்கு அரசு நிறுவனங்களை குத்தகைக்கு விட்டு வருவதற்கு அரசியல் கட்சிகள், சமூக நல ஆர்வலர்கள், பொருளாதார ஆய்வாளர்கள் என பலரும் கடுமையாக கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஜெய்ப்பூர், குவஹாத்தி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய மூன்று விமான நிலையங்களை பொது மற்றும் தனியார் பார்ட்னர்ஷிப் மூலம் அதானி குழுமத்துக்கு 50 ஆண்டுகள் குத்தகைக்கு விட ஒப்புதல் அளித்துள்ளது மோடி அரசின் அமைச்சரவை.
கொரோனா தடுப்பு பணிக்களை மேற்கொள்ளாமல், இதுபோல நடவடிக்கையில் மோடி அரசு ஈடுபடுவதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், ஜெர்மன் நிறுவனம் ஒன்று அதானி குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்ட 3 விமான நிலையங்களை பராமரிக்கவும் இயக்கவும் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதானி குழுமம், ஜெர்மனியின் மியூனிக் விமான நிலையத்தை இயக்கும் ஃப்ளூகாஃபென் மன்ச்சென் ஜிஎம்பிஹெச் (Flughafen München GmbH) என்ற நிறுவனத்தோடு ஒப்பந்தம் போடுவதற்கான வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, ஃப்ளூகாஃபென் நிறுவனம் அகமதாபாத், மங்களூரு மற்றும் லக்னோ ஆகிய மூன்று விமான நிலையங்களை பராமரிப்பதற்காக ஒப்பந்த முடித்துவிட்டதாக கூறப்படுகிறது. அந்த ஒப்பந்தம் ஃப்ளூகாஃபென் நிறுவனம், விமான நிலையத்தை இயக்குவதற்கும் நிர்வகிப்பதற்கும் உட்படுத்துகிறது. மேலும் அதன் ஊழியர்களுக்கு உலகளாவிய தரத்திற்கு பயிற்சி அளிக்கிறது.
ஆனால் இதுகுறித்து இருதரப்பினரும் பதில் அளிக்கவில்லை. ஏற்கனெவே தனியார்மயமாக்குதலலை நாட்டு மக்கள் தீவிரமாக எதிர்க்கும் நிலையில், வெளிநாட்டு நிறுவம் ஒன்று இந்திய விமான நிலையங்களை நிர்வகிப்பது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.
இதனால் பல குற்ற நடவடிக்கை தொடரும் மற்றும் உள்நாட்டு ஊழியர்கள் வேலை பற்போகும் சூழல் உருவாகும். பிரதமர் மோடி சொன்ன சுயசார்பு இந்தியா இதுதானா என பலரும் கருத்துத் தெரிவித்து கேள்வி வருகின்றனர்.
Also Read
-
“தீபஒளியையொட்டி பேருந்துகள் மூலம் 7,88,240 பயணிகள் பயணம்!” : அமைச்சர் சிவசங்கர் தகவல்!
-
“வக்கற்ற ஆட்சி நடத்தியவர் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கை விடுவதா?”: பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டம் - முதலமைச்சரின் மகத்தான அறிவிப்பு! : முரசொலி தலையங்கம் புகழாரம்!
-
தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை... ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை !
-
பருவமழையை எதிர்கொள்ள மின்சாரத்துறை தயார்... பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிய அமைச்சர் சிவசங்கர் !