India
செப்.,10ம் தேதி கூடுகிறது நாடாளுமன்றம்? NEP, EIA 2020-ஐ சட்டங்களாக நிறைவேற்ற திட்டமிடும் மோடி அரசு!
கொரோனா பாதிப்பு காரணமாக மார்ச் 23 ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது. ஜூலை இறுதியில் கூட்டப்பட வேண்டிய மழைக்கால கூட்டத் தொடர் இதுவரையில் கூட்டப்படவில்லை.
ஆறு மாதத்துக்கு ஒரு முறை நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்ற விதிமுறை செப்டம்பர் 22 ஆம் தேதியோடு முடிவடைகிறது. எனவே, செப்டம்பர் 10 ஆம் தேதி நாடாமன்றத்தைக் கூட்ட மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
குறுகிய காலம் மட்டுமே நடத்த திட்டமிடப்பட்டுள்ள இந்த கூட்டத் தொடரில் ஊரடங்கு காலத்தில் கொண்டுவரப்பட்ட பல அவசர சட்டங்களுக்கு மாற்று சட்டம் கோண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு, வேலை இழப்பு, பொருளாதார வீழ்ச்சி, சீன ஊடுருவல், ஃபேஸ்புக் விவகாரம் ஆகிய முக்கிய பிரச்சினைகளை எழுப்ப எதிர்கட்சிகளும் தயாராகி வருகிறது.
இதனிடையே, நாடாளுமன்றத்துக்கு வர இயலாத எம்.பி.கள் தங்களுடைய ஊரிலிருந்தே காணொலிக்காட்சி மூலம் பேச வாய்ப்பு வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் மக்களவை தலைவர் அதிர் ரஞ்சன் சௌத்திரி சபாநாயகருக்கு கோரிக்கை கடிதம் எழுதியுள்ளார்.
Also Read
-
“கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும்!” : முதலமைச்சர் அறிவிப்பு!
-
பெரம்பூரில் ரூ.39 கோடியில் 310 திறந்தவெளி மின்மாற்றிகள் அமைக்கும் பணிகள் தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
கொளத்தூர் மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர்! - 6 நியாய விலைக்கடைகள், மறுவாழ்வு மையம் தொடக்கம்!
-
தமிழ்த்தாயின் தலைமகன் : பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும் : காப்பீட்டு நிறுவனங்களுக்கு அமைச்சர் MRK உத்தரவு!