India
கொரோனா தடுப்பூசியை நேரடியாக மாநில அரசுகள் வாங்க தடை விதிக்க வேண்டும் - தடுப்பூசி நிபுணர்குழு முடிவு!
இந்தியாவில் ஆய்வு செய்யப்பட்டு வரும் தடுப்பூசி தவிர வெளிநாடுகளில் இருந்தும் தேவைக்கு ஏற்ப வாங்கலாம் என்று நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தலைமையிலான தடுப்பூசி நிபுணர்குழு முடிவுக்கு வந்துள்ளது.
மத்திய அரசு நியமித்துள்ள நிபுணர் குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. அதில் தற்போது இந்தியாவில் ஆய்வு செய்யப்பட்டு வரும் ஆக்ஸ்ஃபோர்டு தடுப்பூசி உள்ளிட்ட மூன்று நிறுவனங்களின் ஆய்வு விவரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. எப்போது ஆய்வுகள் முடியும், தயாரிப்பு எப்போது தொடங்க வாய்புள்ளது ஆகிய விவரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும், நாடுமுழுவதும் மக்களுக்கு தடுப்பூசி கிடைக்கும் வகையில் எந்தெந்த நிறுவனத்தின் தடுப்பூசியை வாங்குவது, மாநிலங்களுக்கு விநியோகிப்பது உள்ளிட்ட அம்சங்களும் ஆய்வு செய்யப்பட்டது.
தடுப்பூசி கொள்முதலை மத்திய அரசே மேற்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநில அரசுகள் நேரடியாக தடுப்பூசியை வாங்குவது பாதுகாப்பு பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதால் அதற்கு தடை விதிக்க வெண்டும் என்று நிபுணர்குழு மத்திய அரசுக்கு பரிந்துரை வழங்க இன்று முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசி வாங்கும்போது, இந்தியாவில் ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்ற நடப்பு விதிமுறையை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Also Read
-
தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பணிகள் தொய்வின்றி நடைபெற வேண்டும்... ரூ.2.15 கோடி வழங்கிய முதலமைச்சர் !
-
”இந்தியா வந்துள்ள மோடி, மணிப்பூர் செல்வாரா?” : பிரதமருக்கு 4 கேள்விகளை எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
-
”ஊழலில் திளைக்கும் குஜராத் மாடல் ஆட்சி” : ஜிக்னேஷ் மேவானி குற்றச்சாட்டு!
-
”கீழடி விவகாரத்தில் ஒன்றிய அரசின் உள்நோக்கம் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது” : அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கவில்லை; முழு சங்கியாக மாறிவிட்டார் பழனிசாமி : முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!