India
மறைந்த மனைவியின் மெழுகுச் சிலையை புது வீட்டில் வைத்து அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்திய தொழிலதிபர்!
கர்நாடகாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் சமீபத்தில் பங்களா ஒன்றைக் கட்டியுள்ளார். அதன் புதுமனை புகுவிழாவில் அவரது மறைந்த மனைவியின் மெழுகு சிலையை வைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
ஸ்ரீநிவாஸ் மூர்த்தி என்ற அந்த தொழிலதிபரின் மனைவியான மாதவி 3 வருடங்களுக்கு முன்பு மகள்களுடன் திருப்பதிக்குச் சென்றுள்ளார். அப்போது ஏற்பட்ட விபத்தில் மாதவி உயிரிழந்தார். அவரது மகள்களுக்கு லேசான காயங்களுடன் உயிர்தப்பினர்.
இதன் பின் மனைவியை இழந்த சோகத்திலிருந்த ஸ்ரீநிவாஸ் மூர்த்தி, மனைவியின் கனவான பங்களா ஒன்றைக் கட்டுவது என்று முடிவெடுத்தார். பல்வேறு கட்டிடக் கலை நிபுணர்களை சந்தித்த மூர்த்திக்கு எவருடைய வடிவமைப்பும் பிடிக்கவில்லை. கடைசியாக மகேஷ் ரங்கனடாவரு என்பவரைக் கண்டறிந்தார். அவரே இந்த மெழுகு சிலை வைக்கும் யோசனையையும் மூர்த்தியிடம் தெரிவித்துள்ளார்.
இந்த யோசனை பிடித்துப்போன மூர்த்தி பிரபல பொம்மை தயாரிப்பாளர்களான கோம்பே மேன் என்ற நிறுவனத்தை அணுகி அவரது மனைவியின் முழு உருவச் சிலையைத் தயாரிக்கச் சொல்லியுள்ளார்.
அந்த மெழுகு சிலையை தற்போது மூர்த்தி அவரது புதிய பங்களாவின் வரவேற்பறையில் வைத்துள்ளார். மூர்த்தியின் புதுமனை புகுவிழாவுக்கு வருகை தந்த அனைவரும் உண்மையில் மாதவிதான் அமர்ந்திருக்கிறார் என்று நினைத்துப் பிரமித்துப்போயுள்ளனர்.
Also Read
-
90% நிறைவடைந்த முதல்வர் விஜய் அறை மாற்ற வேலை : புதிய டெண்டர் விட்ட அரசு... சர்ச்சையில் பொதுப்பணித்துறை!
-
“திருவொற்றியூரில் மாணவர் கொலை.. கோமாளி சர்க்கார் மீது பயமில்லை” : உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
-
‘தவெக-வால் கட்டமைக்கப்பட்ட பொய்.. அமைச்சர் மரிய வில்சனால் அம்பலப்படும் விஜய்’ : முரசொலி விமர்சனம்!
-
தவெக அரசின் முதலீட்டாளர்கள் கூட்டம்.. திமுக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் 5 கேள்விகள்!
-
‘தூய சக்தி ஆட்சியில் போதை சக்திகளின் நடமாட்டம்.. கொடூர ஆட்சிக்கு கோவையே சாட்சி’ : முரசொலி விமர்சனம்!