India
பெட்ரோல், விலையை ஏற்றி ஏர்போர்ட்டில் டீ, காபி விலையை குறைத்த மோடி.. விரக்தியில் விளாசும் நெட்டிசன்ஸ்!
நாட்டில் கொரோனாவால் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் மக்கள் இதுவரை இல்லாத அளவுக்கு பொருளாதார ரீதியில் கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். இதனால் வேலையின்றி தவித்து வரும் மக்கள், வேறு வழியின்றி வெளியே கொரோனாவுடனும் போராடிக்கொண்டே தங்களது வாழ்வாதாரத்தை மீட்க அயராது பாடுபட்டு வருகின்றனர்.
இதன் கூடவே, பெட்ரோல் டீசல் போன்ற எரிபொருட்களின் விலையும் உச்சானிக் கொம்பில் உள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துக் கொண்டே வருகிறது. கையில் பணமும் இல்லாமல் வேலையில் இல்லாமல் மக்கள் செய்வதறியாது திணறி வருகின்றனர்.
ஒரு புறம் எதிர்க்கட்சிகளோ மக்களிடையே பணப்புழக்கத்தை உருவாக்குமாறு தொடர்ந்து மத்திய பாஜக அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். இவற்றுக்கு எதற்கும் தீர்வு காணாத மோடி அரசு கொச்சி விமான நிலையத்தில் விற்கப்படும் டீ, காபி, வடைகளின் விலையை குறைத்துள்ள செய்தி மக்களை பெரும் வேதனையிலும் அதிருப்தியிலும் ஈடுபடுத்தியுள்ளது.
கேரளாவின் கொச்சி விமான நிலையத்துக்கு கடந்த மாதம் டெல்லியில் இருந்து வந்த பயணி ஒருவர் அங்கு விற்கப்படும் திண்பண்டங்களின் விலையைக் கண்டு அதிர்ச்சியடைந்து நிலைய அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் பிரதமர் மோடிக்கே கடிதம் மூலம் தனது புகாரை தெரிவித்திருக்கிறார்.
இந்த புகார் மீது சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடியின் உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு எம்.ஆர்.பி விலைக்கு ஏற்ப திண்பண்டங்கள் விற்கப்பட்டு வருகிறது. இதனையறிந்த அந்த பயணி இதேப்போன்று மற்ற அத்தியாவசிய பொருட்களின் விலையையும் குறைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Also Read
-
“பெண்கள் உயர்ந்து நடைபோட உரிமைத் தொகையும் உயரும்; உரிமையும் உயரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” மாபெரும் வெற்றிக் கொண்டாட்டம்
-
ஒன்றிய அமைச்சர்கள் இல்லாத நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டம்! : எதிர்ப்புக்கு பணிந்த ஒன்றிய அரசு!
-
திருப்பரங்குன்றம் - அதிகாரக் குரலில் நீதிமன்றங்களுக்கு உத்தரவிடும் மோகன் பகவத் : மு.வீரபாண்டியன் கண்டனம்!
-
“2026 வெற்றிக்கு அடித்தளமாக ‘இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு’ அமையும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அழைப்பு!