India
“இதே நிலை தொடர்ந்தால் மக்கள் வீதியில் இறங்கி பிரதமர் பதவியை ராஜினாமா செய்யக் கோருவார்கள்” -சிவசேனா தாக்கு
நாட்டில் கொரோனாவால் மக்களின் வாழ்வாதாரம் இதுவரை இல்லாத அளவுக்கு முடங்கி போயிருக்கிறது. ஆனால் மத்திய அரசில் உள்ள பாஜகவோ பொருளாதார சரிவு, மக்களின் சுகாதாரம், வாழ்வாதாரம் என எது குறித்து கவலைப்படாமல் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதையும், மக்கள் நலனுக்கு எதிரான அவசர சட்டங்களை பிறப்பிப்பதையுமே குறிக்கோளாகக் கொண்டிருக்கிறது.
இது ஒரு புறமிறக்க, பாஜக எம்.பி பிரக்யா தாகூர் அனுமன் மந்திரம் கூறினால் கொரோனா போய்விடும் என மக்களிடையே வதந்திகளையும் அலட்சிய மனப்பான்மையையும் ஏற்படுத்தி வருகிறார்.
இவற்றையெல்லாம் கண்டித்துள்ள சிவசேனாவின் சஞ்சய் ராவத், அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் கட்டுரை எழுதியுள்ளார். அதில், அவர் குறிப்பிட்டுள்ளதாவது.
“கொரோனாவால் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் மாதச்சம்பளம் பெரும் ஏராளமான மக்கள் வேலையிழந்து அவதியுற்றிருக்கிறார்கள். தொழில் துறை, வர்த்தகத்துறை முடங்கியதால் ரூ.4 லட்சம் கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
இப்படியாக இக்கட்டான சூழல் நிலவும் வேளையில் ரஃபேல் விமானம் மூலம் குண்டுகள் வீசுவதன் மூலம் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சிக்கலையும் பிரச்னைகளையும் தீர்த்துவிட முடியாது. பிரதமர் மோடி அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய் திட்டத்தின் மூலம் மக்களுக்கு என்ன பயன் ஏற்பட்டது?
மத்திய அரசு அளிக்கும் வாக்குறுதிகளாலும், நம்பிக்கைகளால் மட்டுமே மக்களின் வாழ்வாதாரம் மேம்பட்டுவிடாது. ஏனெனில் மக்கள் தங்கள் எதிர்காலத்தின் பாதுகாப்பற்ற நிலை குறித்து கடுமையான கவலையில் ஆழ்ந்திருக்கிறார்கள்.
அவர்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கிறது. கொரோனாவால் உருவாகியுள்ள வேலையின்மையை அரசு தீர்க்காவிட்டால் பிரதமருக்கு எதிராக மக்கள் போராடும் சூழல் உண்டாகும்.
கொரோனா பரவலை சரிவரை கையாளாமல் பொருளாதார சிக்கலையும் இழுத்துவிட்ட இஸ்ரேல் அரசுக்கு எதிராக மக்கள் வீதிக்கு வந்து போராடியது போன்று இந்தியாவிலும் நிகழலாம். பிரதமர் மோடி பதவியை ராஜினாமா செய்யக் கோரி மக்கள் முறையிடும் காலமும் கணியலாம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
ரூ.36.6 கோடியில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் மதுரை Master Plan 2044 வரை... அசத்திய முதலமைச்சர்!
-
SWAYAM தேர்விலும் தமிழக மாணவர்களிடம் வன்மத்தை கொட்டும் ஒன்றிய பாஜக அரசு.. ஆதாரத்துடன் சு.வெ. கண்டனம்!
-
திட்டப் பணிகள் திறப்பு முதல் 1.77 லட்ச பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் வரை... மதுரையில் முதலமைச்சர்!
-
மதுரை பந்தல்குடி வாய்க்காலில் மேம்பாட்டுப் பணிகள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
-
மதுரை, மேலமடை பகுதியில் ரூ.150 கோடியில் “வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்” - திறந்து வைத்தார் முதல்வர் !