India
இறுதியாண்டு மாணவர்களுக்கு செமஸ்டரை நடத்தியே தீருவேன் என UGC பிடிவாதமாக இருப்பது ஏன்? - மாணவர்கள் கேள்வி!
கல்லூரி, பல்கலைக்கழக இறுதி ஆண்டு தேர்வுகளை ரத்து செய்துவிட்டு முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் தரப்பில் பதில் மனு தாக்கல்.
கல்லூரி இறுதி ஆண்டு தேர்வுகளை ரத்து செய்ய முடியாது என்று பல்கலைக்கழக மாணியக் குழு நேற்று முன் தினம் உச்ச நீதிமன்றத்தில் எழுத்து மூலம் பதிலளித்திருந்தது. அதற்கு மாணவர்கள் தரப்பில் நேற்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், கொரோனா பரவலால் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு, பல மாநிலங்களில் மழை பாதிப்பு உள்ளிட்ட அம்சங்களைக் கணக்கில் கொள்ளாமல் செப்டம்பர் மாதம் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று யு.ஜி.சி தொடர்ந்து பிடிவாதமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 31 வரை நடைபெற்ற தேர்வுகளின் அடிப்படையில் தேர்வு முடிவுகளை வெளியிட்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினால் விரைவாக ஒரு வேலை தேட வாய்ப்பாக அமையும். வேலை இழந்து நிற்கும் பல குடும்பங்களின் நிலமையையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
எனவே முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்து தேர்வு முடிவுகளை தாமதமின்றி வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று மாணவர்கள் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Also Read
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!