India
மதுபோதைக்காக சாராயத்தில் சானிடைசர் கலந்து குடித்த 9 பேர் பரிதாப பலி - ஆந்திராவில் சோகம்!
ஆந்திராவில் மதுவகைகள் அதிக விலைக்கு விற்கப்படுவதால் மதுவிற்கு அடிமையானவர்கள் மது வாங்கமுடியாத சூழலில் மதுபோதைக்காக பல விபரீத முடிவுகளை கையில் எடுத்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள குரிசேடு பகுதியில் தினசரி கூலி வேலைக்குச் சொல்வோர், தூய்மைப் பணியாளர்கள் என அதிகம் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியைச் சேர்ந்த சில தொழிலாளர்கள் நேற்றைய தினம் மது வாங்க போதிய அளவில் பணம் இல்லாததால் கள்ளச்சாரயத்தை வாங்கி வந்துள்ளனர்.
அப்போது சாராயத்துடன் ஸ்பிரிட், சானிடைசரை கலந்தால் போதை இன்னும் அதிகாகும் என எண்ணி அனைத்தையும் ஒன்றாகக் கலந்து குடித்துள்ளனர். இதனையடுத்து கள்ளச்சாரயம் மற்றும் சானிடைசர் கலந்த சாராயம் என குடித்த 10 பேருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உடல்நலம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட9 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
புத்தகக் கண்காட்சிகள் எழுத்தாளர்களுக்கு மட்டுமானது அல்ல அனைவருக்கும் சொந்தம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“இதுதான் அமித்ஷாவின் வேலையா?”: ED ரெய்டுக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம்!
-
1.91 கோடி குடும்பங்களின் கனவை நனவாக்க... “உங்க கனவ சொல்லுங்க” திட்டம்! : நாளை (ஜன.9) முதல் தொடக்கம்!
-
Umagine TN 2026 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு : ரூ.9,820 கோடி முதலீடு - 4250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு!
-
“இளைய தலைமுறைக்கான தமிழ்நாட்டை கட்டி எழுப்பும் திராவிட மாடல்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!