India
மதுபோதைக்காக சாராயத்தில் சானிடைசர் கலந்து குடித்த 9 பேர் பரிதாப பலி - ஆந்திராவில் சோகம்!
ஆந்திராவில் மதுவகைகள் அதிக விலைக்கு விற்கப்படுவதால் மதுவிற்கு அடிமையானவர்கள் மது வாங்கமுடியாத சூழலில் மதுபோதைக்காக பல விபரீத முடிவுகளை கையில் எடுத்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள குரிசேடு பகுதியில் தினசரி கூலி வேலைக்குச் சொல்வோர், தூய்மைப் பணியாளர்கள் என அதிகம் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியைச் சேர்ந்த சில தொழிலாளர்கள் நேற்றைய தினம் மது வாங்க போதிய அளவில் பணம் இல்லாததால் கள்ளச்சாரயத்தை வாங்கி வந்துள்ளனர்.
அப்போது சாராயத்துடன் ஸ்பிரிட், சானிடைசரை கலந்தால் போதை இன்னும் அதிகாகும் என எண்ணி அனைத்தையும் ஒன்றாகக் கலந்து குடித்துள்ளனர். இதனையடுத்து கள்ளச்சாரயம் மற்றும் சானிடைசர் கலந்த சாராயம் என குடித்த 10 பேருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உடல்நலம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட9 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
- 
	    
	      
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
 - 
	    
	      
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
 - 
	    
	      
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
 - 
	    
	      
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!
 - 
	    
	      
S.I.R-க்கு எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! : முழு விவரம் உள்ளே!