India
“பா.ஜ.கவின் மோசடிகளை முறியடித்து நாட்டு மக்கள் ஜனநாயகத்தை காப்பார்கள்” - ராகுல் காந்தி நம்பிக்கை!
ராஜஸ்தான் மாநிலத்தில் அறுதிப் பெரும்பான்மையுடன் அசோக் கெலாட் தலைமையில் நடைபெற்று வரும் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்பதற்காக அந்த மாநில ஆளுநர் மூலமாக பா.ஜ.க. முயற்சி செய்கிறது.
ராஜஸ்தானில் பா.ஜ.க. நிகழ்த்தி வரும் ஜனநாயகப் படுகொலையை கண்டித்து அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஆளுநர் மாளிகை முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதென அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முடிவு செய்திருக்கிறது.
இதனையடுத்து ஜனநாயகத்துக்காக குரல் கொடுப்போம் (SpeakUpForDemocracy) என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், அரசியலமைப்பின் அடிப்படையான மக்களின் குரலால் நாட்டின் ஜனநாயகம் இயங்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் மோசடி சதியை புறக்கணித்து இந்தியாவின் ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் நாட்டு மக்களும் பாதுகாப்பார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
பேரவை நேரலை இருட்டடிப்பு: “இதுவும் பாசிச நடவடிக்கையே” - சபாநாயகருக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கடிதம்!
-
வெள்ளை அறிக்கை : “‘Sorry Bro’ என்று சொல்வதற்கு 210 பக்கமா?” - முரசொலி கடும் தாக்கு!
-
“ஒரு மாவட்டத்தில் மட்டும்.. 18 நாட்களில்.. 17 போக்சோ வழக்குகள்” - அதிரவைக்கும் தகவல்களின் முழு விவரம்!
-
“FIFA WorldCup.. ‘கால்பந்து குழந்தை இயேசு’ ரசிகர்களின் அளவிலா அன்பு” - சுவாரசிய சம்பவத்தின் பிண்ணனி!”
-
“கம்பீர் தேவையில்லை.. இந்திய அணிக்கு தோனியை கொண்டு வாருங்கள்… முன்னாள் வீரர் பரபரப்பு கருத்து!”