India
“பா.ஜ.கவின் மோசடிகளை முறியடித்து நாட்டு மக்கள் ஜனநாயகத்தை காப்பார்கள்” - ராகுல் காந்தி நம்பிக்கை!
ராஜஸ்தான் மாநிலத்தில் அறுதிப் பெரும்பான்மையுடன் அசோக் கெலாட் தலைமையில் நடைபெற்று வரும் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்பதற்காக அந்த மாநில ஆளுநர் மூலமாக பா.ஜ.க. முயற்சி செய்கிறது.
ராஜஸ்தானில் பா.ஜ.க. நிகழ்த்தி வரும் ஜனநாயகப் படுகொலையை கண்டித்து அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஆளுநர் மாளிகை முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதென அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முடிவு செய்திருக்கிறது.
இதனையடுத்து ஜனநாயகத்துக்காக குரல் கொடுப்போம் (SpeakUpForDemocracy) என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், அரசியலமைப்பின் அடிப்படையான மக்களின் குரலால் நாட்டின் ஜனநாயகம் இயங்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் மோசடி சதியை புறக்கணித்து இந்தியாவின் ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் நாட்டு மக்களும் பாதுகாப்பார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
“வடசென்னையை வளர்ந்த சென்னையாக மாற்ற ரூ.8,000 கோடி ஒதுக்கீடு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!
-
சென்னையில் ரூ.13.56 கோடியில் நவீன வசதிகளுடன் ‘முதல்வர் திருமண மாளிகை’ திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
“இனி ‘கருணை’ இல்லை! ‘உரிமை’தான்!” : ஜாக்டோ-ஜியோ அமைப்பின் நன்றி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
அசாம் பா.ஜ.க.வின் வெளிப்படையான வெறுப்பு! : இஸ்லாமியர்களை அச்சுறுத்துவதற்காக தண்டனை இல்லையா?
-
“தமிழ்நாட்டுக்கான இரயில்வே திட்டங்கள் : தலையிட்டு தீர்வு காணவேண்டும்” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!