India
“உச்சம் தொடும் கொரோனா பாதிப்பு - ஒரே நாளில் 28,701 பேர் பாதிப்பு” - என்ன செய்ய காத்திருக்கிறது மோடி அரசு?
கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று.
உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றுக்கு 13,039,853 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சுமார் 571,659 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர். அதிகட்சமாக அமெரிக்காவில் மட்டும் 3,413,995 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 137,782 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு 8 லட்சத்தை தாண்டியது. 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 28,701 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 500 பேர் சிகிச்சையின் போது உயிரிழந்துள்ளனர்.
இதனால் இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23,174 ஆக அதிகரித்துள்ளது. அதேப்போல், நாடுமுழுவதும் தற்போது பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,78,254 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 5 நாட்களில் 1,29,888 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ள சூழலில் நாடு முழுவதும் தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பாதிப்பு இன்னும் அதிகரிக்கும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
Also Read
-
“நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது” -முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் வருத்தம்!
-
5வது மாடியில் இருந்து வீசப்பட்ட பேச்சிளம் குழந்தை... தாயை அதிரடியாக கைது செய்த போலீஸ் -விசாரணையில் பகீர்!
-
காணாமல் போன மோடி : காணவில்லை என சுவரொட்டி அடித்த மணிப்பூர் மக்கள்!
-
பிரசாரத்துக்கு சென்ற பாஜக வேட்பாளருக்கு எதிர்ப்பு: சம்பவ இடத்திலேயே விவசாயி பரிதாப பலி -குவியும் கண்டனம்!
-
“பெண்கள் என்றால் எதை வேண்டுமானாலும் பேசலாமா ?” - சவுக்கு மீடியா சங்கருக்கு மகளிர் காங்கிரஸ் கண்டனம் !