India
“DHFL நிறுவனம் ரூ. 3,688 கோடி வங்கி மோசடி” - பஞ்சாப் நேஷனல் வங்கி புகார்!
இந்தியாவின் இரண்டாவது பெரிய அரசு கடன் வழங்கும் வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றொரு மோசடியால் பாதிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் நீரவ் மோடி ரூ.11,300 கோடி மோசடி செய்த வழக்கு நடைபெற்று வரும் நிலையில், திவான் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் ரூ.3,688 கோடி கடன் மோசடி செய்துள்ளதாக ரிசர்வ் வங்கியிடம் பஞ்சாப் நேஷனல் வங்கி புகார் அளித்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கார்ப்பரேட் கிளை ஏராளமான நிறுவனங்களுக்கு தொழில் கடன் அளித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த வங்கியில் பல ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அந்தவகையில் DHFL எனப்படும் திவான் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் மோசடியில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது. வீடு கட்ட கடன் வழங்கும் நிறுவனமான DHFL, பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கார்ப்பரேட் கிளையில் ரூ.3,688.58 கோடியை மோசடி செய்துள்ளதாக ரிசர்வ் வங்கியிடம் தகவல் அளித்துள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி மற்றும் யூனியன் வங்கி ஆகியவையும் DHFL நிறுவனம் மோசடியில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பா.ஜ.க ஆட்சியால் பலர் வங்கி மோசடியில் ஈடுபட்டு நாட்டை விட்டு தப்பித்து வருவது தொடர்ந்து வரும் நிலையில், இந்த புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
விருதுநகர் வெடி விபத்தில் 3 பேர் பலி:முதலமைச்சர் இரங்கல் -அரசின் உதவி விரைந்து வழங்கப்படும் எனவும் உறுதி!
-
ஆபாச வீடியோ சர்ச்சை : “பிரஜ்வலை இந்தியா அழைத்து வர வேண்டும்...” - பிரதமர் மோடிக்கு சித்தராமையா கடிதம் !
-
இந்தியாவிற்கு ஏற்பட்ட மற்றொரு தலைகுனிவு : சர்வதேச செய்தியான பிரஜ்வல் பாலியல் விவகாரம் - குவியும் கண்டனம்!
-
“ராகுல் காந்தியா? நரேந்திர மோடியா?” -பிரசார கூட்டத்தில் பாஜக நிர்வாகி கேள்விக்கு அதிரடி பதிலளித்த மக்கள்!
-
குடும்பத்தினருக்காக அரசாணை வெளியிட்டாரா EPS? அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு!