India
“DHFL நிறுவனம் ரூ. 3,688 கோடி வங்கி மோசடி” - பஞ்சாப் நேஷனல் வங்கி புகார்!
இந்தியாவின் இரண்டாவது பெரிய அரசு கடன் வழங்கும் வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றொரு மோசடியால் பாதிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் நீரவ் மோடி ரூ.11,300 கோடி மோசடி செய்த வழக்கு நடைபெற்று வரும் நிலையில், திவான் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் ரூ.3,688 கோடி கடன் மோசடி செய்துள்ளதாக ரிசர்வ் வங்கியிடம் பஞ்சாப் நேஷனல் வங்கி புகார் அளித்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கார்ப்பரேட் கிளை ஏராளமான நிறுவனங்களுக்கு தொழில் கடன் அளித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த வங்கியில் பல ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அந்தவகையில் DHFL எனப்படும் திவான் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் மோசடியில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது. வீடு கட்ட கடன் வழங்கும் நிறுவனமான DHFL, பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கார்ப்பரேட் கிளையில் ரூ.3,688.58 கோடியை மோசடி செய்துள்ளதாக ரிசர்வ் வங்கியிடம் தகவல் அளித்துள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி மற்றும் யூனியன் வங்கி ஆகியவையும் DHFL நிறுவனம் மோசடியில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பா.ஜ.க ஆட்சியால் பலர் வங்கி மோசடியில் ஈடுபட்டு நாட்டை விட்டு தப்பித்து வருவது தொடர்ந்து வரும் நிலையில், இந்த புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
சென்னையில் ரூ.3,510 கோடி முதலீட்டில் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புத்தாக்க மையம்! : MoU கையெழுத்தானது!
-
இளம் அரசு பணியாளர்கள் : 9801 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“தமிழ்நாட்டின் எதிர்காலம் இளம் அரசுப் பணியாளர்களிடம் தான் இருக்கிறது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
ரூ.5000 பஞ்சாமிர்தம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கைக்கு அரசியல் கட்சிகள் வரவேற்பு!
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2000 உயர்த்தி வழங்கப்படும் : முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி!