India
“கொரோனாவை ‘டெக்சாமெத்தசோன்’ குணப்படுத்தும்” - நோயாளிகளுக்கு வழங்க மத்திய அரசு அனுமதி!
கொரோனா தொற்று பரவல் வேகம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கொரோனாவுக்கு பலியாவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.
கொரோனாவை குணப்படுத்த பிரத்யேக தடுப்பூசிகளோ மருந்தோ கண்டுபிடிக்கப்படாத நிலையில் பல்வேறு மருந்துகள் ஆய்வுக்குள்ளாக்கப்பட்டு வருகின்றன.
‘ஹைட்ராக்சி குளோரோகுயின்’ எனும் மருந்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பரிந்துரை செய்தார். அதனால் பக்க விளைவுகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அதன் பயன்பாடு நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்தியாவில் ஃபேவிபிராவிர், ரெம்டெசிவிர் ஆகிய மருந்துகளை கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்த பரிந்துரை செய்யப்பட்டிருந்தாலும் அவற்றிலும் சந்தேகமான நிலையே இருந்து வருகிறது.
இந்நிலையில், மிதமான மற்றும் தீவிர கொரோனா அறிகுறிகள் காணப்படும் நபர்களுக்கு, ‘டெக்சாமெத்தசோன்’ மருந்தை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
டெக்சாமெத்தசோன், கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தும் என பிரிட்டனில் நடந்த பல்வேறு ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.
கொரோனா தீவிரமாக பாதிக்கப்பட்ட நபர்களுக்கு கொடுத்து பரிசோதனை செய்ததில், இறப்பு வீதம் 35 சதவீதம் குறைந்ததாக தெரியவந்துள்ளதாக பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு கழக நிபுணர் குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மிதமான மற்றும் தீவிரமாக கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு ‘டெக்சாமெத்தசோன்’ மருந்தை வழங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
Also Read
-
மீண்டும் அதிகாரப் போட்டி... தொடரும் கோஷ்டி மோதல்கள் – அதிமுகவின் உட்கட்சி மோதல் வரலாறு!
-
“விஜய்க்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தி.மு.க தலைவர் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்! : ஆரத்தழுவி வரவேற்ற மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க.வின் 107 எம்.எல்.ஏ.க்களில் 41 பேர் மீது வழக்கு : வெளியான அதிர்ச்சி ஆய்வறிக்கை!
-
மறந்துட்டியா..?! - வெற்றி சான்றிதழை மறந்த தவெக பெண் அமைச்சர்.. பதவியேற்காமல் அனுப்பி வைக்கப்பட்ட சோகம்!