India
“கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ரூ.103ல் மாத்திரை ரெடி; 4 நாட்களில் நல்ல முன்னேற்றம்” - DGCI அனுமதி!
கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, ஃபேவிபிராவிர் என்ற மருந்துக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் வழங்கி உள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வெகுவேகமாகப் பரவி வருகிறது. நேற்று மட்டும் உலகம் முழுவதும் சுமார் 1,50,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றின் தீவிரம் குறையாத நிலையில், பல்வேறு நாடுகளில் கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள் குறித்த ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனா சிகிச்சைக்கு ஃபேவிபிராவிர் என்ற மருந்தின் மூலம் நல்ல பலன் கிடைப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இம்மருந்தை மும்பையைச் சேர்ந்த கிளென்மார்க் பாராமெடிக்கல் நிறுவனம் உற்பத்தி செய்துள்ளது.
லேசான மற்றும் மிதமான கொரோனா பாதிப்புள்ளவர்களிடத்தில் இந்த மருந்தைக் கொடுத்துச் சோதித்துப் பார்த்ததில் 88 சதவிகிதம் வரை வெற்றி கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஃபேவி ப்ளூ என்ற பெயரில் இந்த மாத்திரையை கிளென்மார்க் பாராமெடிக்கல் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த மாத்திரை ஒன்றின் விலை ரூபாய் 103 எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த மருந்துக்கான உற்பத்தி மற்றும் விற்பனைக்கான அனுமதியை இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் நேற்று வழங்கியுள்ளது.
இந்த மருந்து குறித்து கிளென்மார்க் பாராமெடிக்கல் நிறுவனத்தின் தலைவர் கிளென் சல்தானா கூறுகையில், “இந்தியாவில் தற்போது நிலவும் இக்கட்டான சூழலில் மருந்திற்கு அனுமதி கிடைத்திருப்பது ஆறுதலான விஷயம். இம்மருந்தை எடுத்துக் கொள்வதன் மூலம் நான்கு நாட்களில் நோயாளியிடம் நல்ல முன்னேற்றத்தினை காண முடியும்.
இது வாய் வழியாக கொடுக்கப்படும் மருந்து என்பதால் எளிதானது. நாடு முழுவதும் உள்ள நோயாளிகளுக்கு இம்மருந்தினை விரைவாக கொண்டு சேர்க்க அரசுடன் இணைந்து செயல்படுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
பலம் வாய்ந்த இரு அணிகளை வீழ்த்திய ஹர்திக் பாண்டியாவின் Trade : கடைசி இரு இடங்களில் MI,GT !
-
நீட் தேர்வெழுத வந்தவர்களுக்கு குடிநீர் வழங்காத தேர்வு மையம்: களத்தில் உதவிய போலீஸார் - குவியும் பாராட்டு!
-
தொடரும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிரான போராட்டம் : ஹரியானாவில் மேலும் ஒரு பெண் விவசாயி உயிரிழப்பு !
-
“பிரிஜ் பூஷன் குற்றவாளி இல்லை” - பிரிஜ் மகனுக்கு பாஜக சீட் கொடுத்தது தொடர்பாக நிர்மலா சீதாராமன் விளக்கம்!
-
“நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது” -முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் வருத்தம்!