India
“பா.ஜ.க பாணியை கையில் எடுத்த காங்கிரஸ்”: மணிப்பூரில் ஆட்சி கவிழ்கிறது? - மீண்டும் ஆட்சியமைக்கிறது காங்.?
மணிப்பூரில் பிரேன் சிங் தலைமையிலான பாஜ கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. 60 சட்டப்பேரவைட் தொகுதிகளைக் கொண்ட மணிப்பூரில் கடந்த 2017லில் நடந்த தேர்தலில் 28 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. 21 இடங்களில் பா.ஜ.க வெற்றி பெற்றது.
காங்கிரஸ் 28 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் இருந்தது போதும் கூட, பா.ஜ.க 4 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த நாகா மக்கள் முன்னணி, தேசிய மக்கள் கட்சி, மற்றும் ஒரு தொகுதியில் வெற்றி பெற்ற லோக் ஜனசக்தி, திரிணாமுல் காங்கிரஸ், சுயேச்சையுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைக் கைப்பற்றியது.
இந்நிலையில் சமீபகாலமாக நடந்த மோதல் போக்குகாரணமாக விரிசல் ஏற்பட்ட பா.ஜ.க கூட்டனி தற்போது முழுமையாக உடைந்துள்ளது. குறிப்பாக, பா.ஜ.கவைச் சேர்ந்த மூன்று எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
இதனையடுத்து பா.ஜ.கவின் கூட்டணி கட்சி கட்சிகளான தேசிய மக்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 4 பேர், திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர், சுயேச்சை எம்எல்ஏ ஒருவர் எனமொத்தம் 9 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க அரசுக்கு தெரிவித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றனர்.
இதனிடையே ராஜினாமா செய்த எஸ்.சுபாஷ்சந்திர சிங், டி.டி.ஹாகீப் மற்றும் சாமுவேல் ஜெண்டாய் ஆகிய மூன்று எம்.எல்.ஏக்களும் காங்கிரஸில் இணைந்தனர். இதனால் மணிப்பூரில் பா.ஜ.க கூட்டணி ஆட்சி கவிழும் நிலை உருவாகியிருக்கிறது. தற்போது காங்கிரஸின் பலமும் 34 ஆக உயர்ந்துள்ளதால் ஆட்சியை அமைப்பதற்கான பெரும்பான்மை இருப்பதால் அமைக்க காங்கிரஸ் தீவிரமாக முயற்சித்து வருகிறது.
Also Read
-
திருவள்ளுவருக்கு மீண்டும் காவிச் சாயம்... மவுனம் காக்கும் தவெக அரசு; விளாசிய உதயநிதி ஸ்டாலின்!
-
“திருவள்ளுவருக்கு மீண்டும் காவிச் சாயமா?; தவெக அரசு வேடிக்கைப் பார்க்கலாமா?”: ஆசிரியர் கி.வீரமணி கண்டனம்!
-
சிங்கப்பெண் அதிரடிப்படையில் தேர்வான பெண் காவலருக்கு டார்ச்சர்? - இன்ஸ்பெக்டர் மீது பாலியல் புகார்!
-
”கூடிய ’GenZ DMK’ கொள்கைக் கூட்டம்.. தைரியமாக களமாடுங்கள் திமுக உங்களுடன் என தெம்பூட்டிய கழக சட்டத்துறை”
-
வயிற்று வலியை தீர்க்கும் : கஞ்சா செடி வளர்த்து விற்பனை - தந்தை மகன் கைது!