India
“பலாப்பழத்தில் விஷம் வைத்து 3 பசுமாடுகளைக் கொன்ற கொடூரம்” - இந்தியாவில் விலங்குகள் மீது தொடரும் தாக்குல்!
கேரளாவின் பாலக்காடு மாவட்டம் மன்னார்காடு காட்டுப்பகுதியில், 15 வயதுடைய கர்ப்பிணி யானை, மர்ம நபர்கள் வெடியை மறைத்து வைத்திருந்த அன்னாசி பழத்தைக் கடித்து வாய் சிதறி உயிரிழந்த சம்பவம் நாட்டில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த கொடூர சம்பவத்தை அறிந்த சமூகவலைதள வாசிகள் தங்களது உள்ளக் குமுறலையும், ஆத்திரத்தையும் சமூக வலைதளங்களில் கொட்டித் தீர்த்தனர். பிரபலங்கள் பலரும் யானைக்கு நேர்ந்த கொடுமைக்கு எதிராக பதிவிட்டனர்.
இந்த நிகழ்வு நடந்த ஒரே வாரத்திற்குள் இமாச்சல பிரதேசத்தில் வெடிமருந்து வைத்து மறைக்கப்பட்ட கோதுமை உருண்டையை சாப்பிட்டதால் கர்ப்பிணி பசுமாடு படுகாயத்துக்கு ஆளானது. இதனால், அதன் வாய், பற்கள் மற்றும் தாடைப் பகுதி கடுமையாக சேதமடைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து தற்போது கர்நாடகாவில், 3 பசுமாடுகள் பழத்தில் விஷம் வைத்து கொல்லப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டத்தில் பசரவள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கிட்டே கவுடா. இவர் விவசாயம் மற்றும் பால் வியாபாரம் செய்து வருகிறார். பால் வியாபாரம் செய்வதற்காக 4 கறவை மாடுகளை கிட்டே வளர்த்து வந்துள்ளார்.
இந்த பசுமாடுகள் கிட்டேவின் பக்கத்து தோட்டக்காரரான மஞ்சுநாத் என்பவரின் வயலில் அடிக்கடி மேய்ச்சலுக்குச் சென்றதால் இருவருக்கும் மோதல் நடந்தவண்ணம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று மேய்ச்சலுக்கு சென்ற மாடுகள் வரவில்லை என கிட்டே தேடியபோது, தனது மூன்று பசுமாடுகள் மஞ்சுநாத் வயலில் வாயில் நுரைதள்ளி இறந்துகிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் இதுதொடர்பாக பசரவள்ளி காவல்நிலையத்திற்கு கிட்டே புகார் அளித்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் பலாப்பழத்தில் விஷம் வைத்து பசுமாடுகள் கொல்லப்பட்டதை கண்டறிந்துள்ளனர். இதனையடுத்து இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலிஸார் தலைமறைவாகியுள்ள மஞ்சுநாத்தை தேடி வருகின்றனர்.
பசிக்காக மேய வந்த பசுமாட்டை விஷம் வைத்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் விலக்குகள் மீது மனிதர்கள் நடத்தும் தாக்குதல் அதிகரித்துவிட்டதாக விலங்கின ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
Also Read
-
90% நிறைவடைந்த முதல்வர் விஜய் அறை மாற்ற வேலை : புதிய டெண்டர் விட்ட அரசு... சர்ச்சையில் பொதுப்பணித்துறை!
-
“திருவொற்றியூரில் மாணவர் கொலை.. கோமாளி சர்க்கார் மீது பயமில்லை” : உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
-
‘தவெக-வால் கட்டமைக்கப்பட்ட பொய்.. அமைச்சர் மரிய வில்சனால் அம்பலப்படும் விஜய்’ : முரசொலி விமர்சனம்!
-
தவெக அரசின் முதலீட்டாளர்கள் கூட்டம்.. திமுக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் 5 கேள்விகள்!
-
‘தூய சக்தி ஆட்சியில் போதை சக்திகளின் நடமாட்டம்.. கொடூர ஆட்சிக்கு கோவையே சாட்சி’ : முரசொலி விமர்சனம்!