India
“ஊரடங்கு தளர்ந்தபின் கொரோனா தொற்று வேகமெடுப்பது இங்கு மட்டும்தான்” - பா.ஜ.க அரசை விளாசும் ராகுல் காந்தி!
கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பல்வேறு துறை வல்லுநர்களுடன் காணொளிக் காட்சி மூலம் உரையாடி வருகிறார்.
அந்த வரிசையில் இன்று, பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் தலைமை இயக்குனர் ராஜீவ் பஜாஜூடன் காணொளிக் காட்சி மூலமாக உரையாடினார்.
அப்போது பேசிய ராகுல் காந்தி, “இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு தோல்வி அடைந்துவிட்டது.
உலகிலேயே ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்திய பிறகு நோய் அதிகரிப்பது இங்குதான். ஊரடங்கு தோல்வி அடைந்துவிட்டது எனக் கூறுவது இதனால்தான். உலகப் போரின்போது கூட, இந்த அளவுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில்லை. இது ஒரு மிகப்பெரிய பேரழிவு.
கொரோனாவுக்கு எதிரான போரில் மாநில முதலமைச்சர்களை முன்னிலைப் படுத்தியிருக்க வேண்டும். மத்திய அரசு ஒரு செயற்பாட்டாளராகச் செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால், கொரோனா தடுப்பு முயற்சியில் தோல்வியடைந்துள்ள நிலையில் தற்போது மத்திய அரசு பின்வாங்கியுள்ளது. இப்போது பொறுப்பை மாநிலங்களுக்கு விட்டுவிடப் பார்க்கிறது.” எனத் தெரிவித்துள்ளார்.
ராஜீவ் பஜாஜ் பேசுகையில், “இந்தியா ஊரடங்கை கையாண்ட விதம் அடக்குமுறை ரீதியிலானது. அரசு தொற்று பரவலைத் தீர்க்கவில்லை. அதற்குப் பதிலாக பொருளாதாரத்தை அழித்துவிட்டது. வைரஸை மட்டுப்படுத்துவதற்குப் பதில், மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் அரசு முடக்கிவிட்டது.
மக்கள் பிரதமரை பின்தொடர்கிறார்கள். எனவே, மக்களின் மனதில் இருந்து பயத்தை போக்க பிரதமர் முயற்சித்திருக்க வேண்டும்.பிரதமர் ஒவ்வொருவருக்கும் ஊக்கம் அளிக்கவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ஒன்றிய அமைச்சர்கள் இல்லாத நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டம்! : எதிர்ப்புக்கு பணிந்த ஒன்றிய அரசு!
-
திருப்பரங்குன்றம் - அதிகாரக் குரலில் நீதிமன்றங்களுக்கு உத்தரவிடும் மோகன் பகவத் : மு.வீரபாண்டியன் கண்டனம்!
-
“2026 வெற்றிக்கு அடித்தளமாக ‘இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு’ அமையும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அழைப்பு!
-
திராவிட மாடலில் ‘மிளிரும் மகளிர்!’ : மகளிருக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களின் பட்டியல் உள்ளே!
-
2-ம் கட்ட கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விரிவாக்கம்.. விடுபட்ட மகளிர் வங்கிகளில் ரூ.1000 வரவு!