India
“தேர்தல் முறைகேடு அம்பலம் : பா.ஜ.க அமைச்சரின் வெற்றி செல்லாது” - குஜராத் நீதிமன்றம் அதிரடி!
கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்றது. தேர்தலில் வாக்குப்பதிவின்போது பல்வேறு குளறுபடிகளை ஆளும் பா.ஜ.க செய்ததாக ஊடகங்களில் செய்து வெளியானது.
அந்தத் தேர்தலில் டோல்கா தொகுதியில் பா.ஜ.கவின் பூபேந்திரசின் சுதஸ்மா போட்டியிட்டார். வெறும் 327 வாக்குகள் வித்தியாசத்தில் பூபேந்திரசின் சுதஸ்மா காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அஷ்வின் ரதோடை வீழ்த்தி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதனிடையே குஜராத்தில் பா.ஜ.க அரசு அமைந்தபோது அம்மாநில சட்டத்துறை மற்றும் கல்வித்துறைஅமைச்சராக பூபேந்திரசின் சுதஸ்மா பொறுப்பேற்றார். இதனிடையே, 2017 தேர்தலில் டோல்கா தொகுதியில் தேர்தலில் 429 தபால் ஓட்டுகள் செல்லாதவை என தேர்தல் அதிகாரி அறிவித்தார்.
இந்த தேர்தலில் ஓட்டுகளை, விதிகளை மீறி தேர்தல் அதிகாரி செல்லாது என்று அறிவித்ததாகக் கூறி, காங்கிரஸ் கட்சியில் போட்டியிட்ட அஷ்வின் ரதோட் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். 2018ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் 78 முறை விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில், தேர்தல் ஆணையம், அஷ்வின் ரதோட் மற்றும் சுதஸ்மா தரப்பில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு குஜராத் நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்நிலையில் இதுதொடர்பான வழக்கு விசாரணை முடிந்து குஜராத் உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.
அந்த தீர்ப்பில், பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட பூபேந்திரசின் சுதஸ்மாவின் வெற்றி செல்லாது என அறிவித்துள்ளது. இதனையடுத்து அவர் பதவி இழக்கும் சூழல் உருவாகியுள்ளது. சுதஸ்தமாவுக்கு எதிரான இந்தத் தீர்ப்பு அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“உயிர்களை பலியிடும் அற்ப அரசியல்”: ரஜினிகாந்த் குறித்த ஆதவ் அர்ஜூனா கருத்துக்கு ரசிகர்கள் கடும் கண்டனம்!
-
28,639 பேருக்கு ரூ. 254.59 கோடி மதிப்பில் பிரம்மாண்ட அரசு நலத்திட்ட உதவிகள்: துணை முதலமைச்சர் வழங்கினார்!
-
5 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்கள்…அனைத்து தரப்பினருக்குமானது திராவிட மாடல் ஆட்சி: துணை முதலமைச்சர் பேச்சு!
-
சாலைப் பயணத்திற்கு இனி கவலை இல்லை… ரூ.1,843.85 கோடி செலவில் 11 சாலைகள்: திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
ரூ.211.90 கோடியில் 45 முடிவுற்ற, ரூ.53.76 கோடியில் 9 புதிய திட்டப் பணிகள்: தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!