India
“புகார் கொடுத்த கிரண்பேடியை முதலில் சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்” - நாராயணசாமி ஆவேசம்!
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது :
“தற்போது புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 2 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். திங்கள் முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டு கடைகள் காலை 6 மணியில் இருந்து 5 மணிவரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. மக்கள் வெளியே வருவது கட்டுக்குள் உள்ளது.
புதுச்சேரியில் இருந்து வெளிமாநிலம் செல்வதற்க்கும், வெளி மாநிலத்தில் இருந்து புதுச்சேரி வருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாளை புதுச்சேரி அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. மதுக்கடைகள் திறப்பது குறித்து அமைச்சரவையில் முடிவு செய்யப்படும். மதுவுக்கும், பெட்ரோலுக்கும் கோவிட் வரி விதிப்பது குறித்து நாளை அறிவிக்கப்படும்” என்றார்.
மேலும், “புதுச்சேரி துணை நிலை ஆளுநரின் செயல்பாடு அரசுக்கு களங்கம் ஏற்படவேண்டும் என்பதாக உள்ளது. சி.பி.ஐ முதலறிக்கை தாக்கல் செய்திருக்கிறார்கள் என்று துணை நிலை ஆளுநர் அறிக்கை கொடுத்துள்ளார். தன்னுடைய பதவிக்கு, தகுதிக்கு ஏற்ப வேலை செய்யாமல், அதிகாரிகளின் நேரத்தை வீணாக்கி, நிர்வாகத்தை சீர் குலைக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார்.
புதுச்சேரி மக்களுக்கு கிரண்பேடி துரோகம் செய்து வருகிறார். புகார் கொடுத்த கிரண்பேடியை முதலில் சி.பி.ஐ விசாரிக்க வேண்டும். அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகிறார். இது அவரது பதவிக்கு அழகல்ல.
அதிகாரிகளை மிரட்டுவதும், பொய் வழக்கு போடுவதும், சி.பி.ஐ-யை தொடர்புகொண்டு வழக்கு போட சொல்வதும் அவர் வேலையில்லை. அவர் செயல்பாடு குறித்து முழுமையான அறிக்கையை பிரதமர், உள்துறை அமைச்சருக்கு அனுப்பி உள்ளேன். விரைவில் இதற்கு முடிவு வரும் என்று எதிர்பார்க்கிறேன்” என்று தெரிவித்தார்.
Also Read
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படைத்துள்ள “ததும்பும் தமிழ்ப் பெருமிதம்” நூல்!
-
எங்கள் சாதனைகளை நாங்களே விஞ்சும் அளவிற்கு திராவிட மாடல் 2.O அமையும்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
“என்னை நீங்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சந்திக்கலாம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
50 ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ் சிகிச்சை வசதி அமைக்கப்படும் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
ஜிம்னாஸ்டிக்ஸ் உள்ளிட்ட 20 விளையாட்டுகளுக்கு பயிற்சியாளர்கள் : பணி நியமன ஆணைகளை வழங்கிய துணை முதலமைச்சர்!