India

“14 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி - சரிபாதியாக சரிந்த வளர்ச்சி” : கொரோனாவால் திணறும் இந்திய சேவைத் துறை!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மேலும் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் தொழில்கள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள் என அனைத்தும் மூடப்பட்டதால் அரசுக்கு வருவாய் பெருமளவு குறைந்துவிட்டது. இந்த ஊரடங்கால் மக்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர்.

இந்தச் சூழலில் தளர்வுகள் அளித்தாலும் நிறுவனங்கள் முழுமையாகச் செயல்படமுடியாத சூழலே உள்ளது. தொடர்ந்து நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு மற்றும் பொருளாதார பாதிப்பு காரணமாக கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான பாதிப்பை இந்திய சேவைத் துறை சந்தித்துள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் இந்தியாவுக்கான சேவைகள் கொள்முதல் மேலாளர்கள் அட்டவணையில் (services Purchasing Managers’ Index (PMI)) கடந்த ஏப்ரல் மாதத்தில் 5.4 ஆக குறைந்துள்ளது. இது கடந்த மார்ச் மாதத்தில் 49.3 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக சேவைகள் குறித்தான பர்சேஸிங் மேனேஜர்ஸ் இண்டெக்ஸ் (services Purchasing Managers' Index) கடந்த ஏப்ரல் மாதத்தில் 5.4 ஆக குறைந்துள்ளது. இது கடந்த மார்ச் மாதத்தில் 49.3 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. தரவு பகுப்பாய்வு நிறுவனமான IHS Markit கடந்த டிசம்பர் 2005ல் இருந்து தரவுகளை சேமிக்கத் தொடங்கியதில் இருந்து, சேவைத் துறை குறித்தான வெளியீட்டில் மிகக் கடுமையான சரிவினைக் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், அதில் சேவைத் துறையின் மந்தநிலை, உற்பத்தி துறையின் மந்த நிலையைவிட அதிகமாக இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது. அதாவது மாதாந்திர உற்பத்தி குறியீட்டு அறிக்கையான பிஎம்ஐ குறியீடு 50 புள்ளிகளுக்கு மேல் இருந்தால் வளர்ச்சிக்கான அறிகுறியாகவும், 50 புள்ளிகளுக்குக் கீழாக சரிந்தால் அது சரிவாகவும் கணக்கிடப்படும்.

அந்த வகையில், மார்ச் மாதத்தில் 51.8 புள்ளிகளாக இருந்த குறியீடு, கொரோனா தாக்கம் மற்றும் ஊரடங்கு அமலுக்குப் பிறகு ஏப்ரலில் 27.4 புள்ளிகளாக சரிந்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இன்னும் இந்தியப் பொருளாதாரம் எந்த அளவுக்கு வீழ்ச்சியினைக் காணும் என்பதை அறிய முடிகிறது என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Also Read: பொருளாதார பாதிப்பு : கடும் சரிவைச் சந்தித்த இந்தியாவின் ஏற்றுமதி!