India
“கைம்பெண்ணாக வாழ விருப்பமில்லை; விவாகரத்து கொடுங்கள்” - நிர்பயா குற்றவாளியின் மனைவி வழக்கு!
நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனையை நிறைவேற்ற விடாமல் குற்றவாளிகள் நால்வரும் தனித்தனியே கருணை மனு தாக்கல் செய்தனர். அவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், நாளை மறுநாள் (மார்ச் 20) காலை 5.30 மணியளவில் அவர்களைத் தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், குற்றவாளிகள் நால்வரில் ஒருவரான அக்ஷய் தாக்கூரின் மனைவி புனிதா, பீகார் மாநிலம் அவுரங்காபாத் குடும்பநல நீதிமன்றத்தில் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கோரி வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், “ என் கணவர் குற்றமற்றவர் என எனக்குத் தெரியும். ஆனால், அவரை தூக்கிலிட்ட பிறகு நான் வாழ்நாள் முழுவதும் கைம்பெண்னாக வாழ விருப்பமில்லை. ஆகையால் எனக்கு விவாகரத்து வழங்குங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாகப் பேசியுள்ள புனிதாவின் வழக்கறிஞர், இந்திய இந்து திருமணச் சட்டம் 13(2)(II) அடிப்படையில் பாலியல் வன்கொடுமை குற்றத்துக்கு ஆளான கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்க மனைவிக்கு உரிமை உள்ளது. அதன்படியே வழக்கு தொடரப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
இந்த மனுவை ஏற்ற நீதிமன்றம் நாளை (மார்ச் 19) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகத் தெரிவித்துள்ளது.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!