India
“26 லட்சம் ஏழை மக்களுக்கு ‘பட்டாவுடன் இலவச வீட்டு மனை’ வழங்க முடிவு”: ஆந்திர முதல்வர் அசத்தல் அறிவிப்பு!
ஆந்திர மாநிலத்தில் நிலம் இல்லாத ஏழை மக்களுக்கு இலவச வீட்டு மனை வழங்க அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது. ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் நேற்றைய தினம் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தேர்தல் வாக்குறுதி நடவடிக்கைகள் மற்றும் அவசரகால திட்டம் போன்றவை விவாதிக்கப்பட்டு அவரை செயல்படுத்த ஆந்திர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அதன் ஒருபகுதியாக 26 லட்சம் ஏழை மக்களுக்கு இலவசப் பட்டா வழங்க முடிவெடுத்து ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மார்ச் 25-ம் தேதி யுகாதி (தெலுங்கு வருடப் பிறப்பு) கொண்டாடப்படும் நாளன்று 43,141 ஏக்கர் நிலங்களை மக்களுக்கு வழங்கவும், அன்றைய தினமே நிலத்திற்கு உரிமையாளர்கள் பெயரில் பட்டா பதிவு செய்யவும் முடிவு செய்துள்ளனர்.
இதற்காக 26,979 அரசு நிலத்தை தவற 14,164 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த நிலத்திற்கு உரிய பணம் வழங்கப்பட்டு வருவதாகவும் அதற்கான வேலைகள் அனைத்தும் வட்டாட்சியர் அலுவலகத்தில் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவலை அம்மாநில செய்தித்துறை மற்றும் மக்கள் தொடர்புத்துறை உறுதிப்படுத்தியுள்ளது. ஆந்திர அரசின் இந்த நடவடிக்கைக்கு மக்கள் ஆதரவு அளித்து தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!