India
பிராமணர்களுக்கென தனி கழிவறை : இதிலும் சாதியா? - கேரள கோவில் நிர்வாகத்துக்கு எதிராக தொடரும் கண்டனம்!
திருச்சூரில் குட்டுமுக்கு மகாதேவ என்ற புகழ்பெற்ற கோவில் அமைந்துள்ளது. அந்தக் கோவிலில் அண்மையில் நடந்த திருவிழா ஒன்றிற்காக அரவிந்த் என்ற ஆராய்ச்சி மாணவர் சென்றிருக்கிறார், அங்கு கோவில் வளாகத்தில் உள்ள கழிவறைகளில் ஆண்கள், பெண்கள் மற்றும் பிராமணர்கள் என எழுதப்பட்ட பலகைகள் இருந்துள்ளன.
இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த மாணவர், அந்தப் பெயர் பலகைகளை புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார். அந்தப் படம் வைரலானதோடு, கோவில் நிர்வாகத்தை கண்டித்தும் பதிவுகள் இடப்பட்டன.
இதனையடுத்து, இந்த பெயர்ப் பலகை விவகாரம் தொடர்பாக முதல் முறையாக வாய் திறந்த கோவில் நிர்வாகத்தினர் “குறிப்பிட்ட கழிவறைகள் கோவில் வளாகத்துக்கு பின்புறத்தில் உள்ளன. 20 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது.
இதுவரை எந்த புகாரும், இது தொடர்பாக எழுந்ததில்லை. அதன்பொருட்டு யாரும் கண்டுகொள்ளவில்லை. அந்த கழிவறைகளை கோவிலுக்கு வரும் பக்தர்களும், கோவிலில் பணிபுரிபவர்களுமே பயன்படுத்தி வருகிறார்கள். இருப்பினும் அந்த பலகையை நீக்கிவிட்டு பணிபுரிபவர்களுக்கான கழிவறை என மாற்றிவிடுகிறோம்” எனக் கூறியிருக்கின்றனர்.
மேலும், கழிவறையிலும் சாதி பாகுபாடு பார்ப்பதா என சர்ச்சை எழுந்ததால், இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய தேவசம் போர்டு துணை ஆய்வாளருக்கு உத்தரவிட்டுள்ளதாக தேவசம் போர்டு தலைவர் ஏ.பி.மோகனன் கூறியுள்ளார்.
Also Read
-
வயிற்று வலியை தீர்க்கும் : கஞ்சா செடி வளர்த்து விற்பனை - தந்தை மகன் கைது!
-
”அடுத்தடுத்த அரிவாள் வெட்டு.. அச்சத்தில் மக்கள்.. தறிகெட்டுப் போன சட்டம் ஒழுங்கு” : முழு விவரம்!
-
நடிகர் அஜித்குமார் தாயார் காலமானார் : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
”சறுக்கலை சந்தித்த முதல்வர் விஜயின் டெல்லி பயணம்.. செய்தியாளர்களா.. பதறிய விஜய்” : முரசொலி தலையங்கம்!
-
ஆசிரியப் பெருமக்களைப் பாதுகாக்கும் பணியில் உடனே இறங்குங்கள்! வீரவசனம் வேண்டாம் : அன்பில் மகேஸ் பொய்யாமொழி