India
நரேந்திர தபோல்கரை இந்துத்வா கும்பல் சுட்டுக்கொல்லப் பயன்படுத்திய துப்பாக்கி கண்டெடுப்பு - சி.பி.ஐ தகவல்!
புனேவைச் சேர்ந்த எழுத்தாளரும், மருத்துவருமான நரேந்திர தபோல்கர் கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கும்போது ‘சனாதன் சன்ஸ்தா’ என்ற இந்து அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
மூட நம்பிக்கைகள், வலதுசாரி அமைப்பாளர்களின் கொள்கைகளை எதிர்த்துப் பேசியதால் சுட்டுக்கொல்லப்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டது. தபோல்கர் கொல்லப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடைபெற்று வருகிறது.
இதில், கடந்த ஆண்டு இந்து அமைப்பைச் சேர்ந்த சஞ்சீவ் புனலேகர் மற்றும் விக்ரம் பவே ஆகியோரை சி.பி.ஐ. கைது செய்தது. மேலும் 7 பேர் இந்த விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக இன்னும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தபோல்கரை சுட்டுக்கொல்லப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை சி.பி.ஐ போலிஸார் கண்டுபிடித்துள்ளனர். இதனை நார்வேயைச் சேர்ந்த ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தேடுதல் வேட்டைக்காக 7.5 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும், கைப்பற்றப்பட்ட துப்பாக்கியையும், தபோல்கரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிட்டுள்ள துப்பாக்கிக் குண்டின் அளவையும் ஒப்பிட்டு மேற்கொண்டு விசாரணை மேற்கொள்ளப்படும் என சி.பி.ஐ தரப்பு தெரிவித்துள்ளது.
Also Read
-
"SIR குறித்து மக்கள் ஏமாந்துவிடாமல் எச்சரிக்கை மணியடிப்பது மிகமிகத் தேவை" - தி.க தலைவர் கி.வீரமணி !
-
Reels மோகம் : தண்டவாளத்தில் 2 நண்பர்களுக்கு நேர்ந்த துயர சம்பவம்!
-
2026-ல் “திராவிட மாடல் 2.0 தொடங்கியது!” என்பதுதான் தலைப்புச்செய்தி! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
புயல் எச்சரிக்கை கூண்டு என்றால் என்ன? : ஏன் எற்றப்படுகிறது- எதை உணர்த்துகிறது!
-
சென்னையின் 22 சுரங்கப்பாதைகளிலும் நீர் தேக்கம் இல்லை! : சென்னை மாநகராட்சி எடுத்த நடவடிக்கைகள் என்ன?