India
“மேற்கு வங்கத்தை டெல்லியாகவோ, உ.பியாகவோ மாற்ற அனுமதிக்க மாட்டேன்” - மம்தா பானர்ஜி திட்டவட்டம்!
மோடி அரசின் குடியுரிமை சட்டத் திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய சட்டங்களை கடுமையாக எதிர்த்து வரும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, வங்கதேசத்தில் இருந்து மேற்கு வங்கத்திற்கு குடியேறியவர்கள் அனைவரும் இந்திய குடிமக்கள்தான் என ஆவேசமாக பேசியுள்ளார்.
மேற்கு வங்கத்தின் காலியாகஞ்ச் என்ற இடத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற மம்தா பானர்ஜி, வங்க தேசத்தில் இருந்து இந்தியாவில் குடியேறிய மக்கள் அனைவரும் இந்திய குடிமக்களே அவர்கள் தாராளமாக வாக்களித்து பிரதமரை, முதலமைச்சரை தேர்ந்தெடுக்கலாம்.
இங்கிருந்து உங்களை யாரும் வெளியேற்ற முடியாது. அதற்கு நான் அனுமதிக்கவும் மாட்டேன் என திட்டவட்டமாக கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தை ஒருபோதும் டெல்லியாகவோ, உத்தர பிரதேசமாகவோ மாற்ற அனுமதிக்க மாட்டோம் எனக் கூறியுள்ளார்.
இது வங்காளம் என்பதை எப்போதும் மறந்துவிடாதீர்கள். டெல்லியில் நடந்த வன்முறையைத் தடுக்க மோடி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டனத்திற்கு உரியது எனவும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சி.ஏ.ஏ-ஐ அமல்படுத்த மாட்டோம் என்றும், என்.ஆர்.சி, என்.பி.ஆர்-ஐ நடைமுறைப்படுத்த மாட்டோம் என்றும் பல அதிரடி முடிவுகளை எடுத்து அம்மாநில சட்டமன்றத்தில் மம்தா பானர்ஜி தீர்மானமாக நிறைவேற்றியது தேசிய அளவில் வரவேற்பைப் பெற்றது.
Also Read
-
“தமிழ்நாட்டின் நிரந்தர டிரெண்ட் Black and Red தான் ; 2.0 ஸ்டார்ட்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
விவசாயிகளின் உரிமைக்கான ”அரிசி” படம் நிச்சயம் வெல்லும் : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
தமிழ்நாட்டு மீனவர்கள் தாயகம் திரும்ப உரிய நடவடிக்கை தேவை : ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
-
எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள இந்தியா - பாகிஸ்தான் போட்டி: இலங்கை சென்றடைந்த இந்திய அணி! - முழு விவரம்
-
ஒரே தவணையில் ரூ.5 ஆயிரம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை… முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்க திரண்ட பெண்கள்!