India
“இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம்” : 7.78% அதிகரித்த வேலைவாய்ப்பின்மை!
இந்திய நாட்டின் பொருளாதார நிலை, வரலாற்றில் இதுவரை அளவுக்கு நலிவடைந்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்த நிலையில், பா.ஜ.க அரசு வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதிலும் தொடர்ந்து சறுக்கலைச் சந்தித்து வருகிறது.
பா.ஜ.க அரசு இரண்டாவது முறையாகப் பதவியேற்றிருக்கும் நிலையில், வேலைவாய்ப்பின்மை திண்டாட்டம் சரிசெய்யப்படுமா என பலரும் உன்னிப்பாகக் கவனித்து வந்தனர். ஆனால் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம்தான் அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன.
ஆனால் மத்திய பா.ஜ.க அரசோ, நாட்டில் பொருளாதார சரிவே ஏற்படவில்லை. 2020-ல் பெரும் வேலை வாய்ப்பு உருவாகும் என உண்மையை மறைத்து பொய் பிரசாரங்களை மக்கள் மத்தியில் மேற்கொண்டு வருகிறது.
ஆனால் உண்மை நிலவரங்களை பார்த்தோமானால், இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் 6.1 சதவிகிதம் என்ற அளவிற்கு போய்விட்டதாக செய்திகள் வெளியாகின. அதாவது 100 பேரில் 6.1 பேருக்கு வேலை இல்லை என்று கூறப்பட்டது.
இந்நிலையில் இந்திய பொருளாதாரக் கண்காணிப்பு மையம், இந்தியாவின் வேலை இல்லா திண்டாட்டம் தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவிற்கு பிப்ரவரி மாதம் மட்டும் வேலையில்லாத் திட்டாட்டம் 7.78 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அதேப்போல், கிராமப்புறங்களில் 5.97 சதவீத்தில் இருந்த வேலையில்லா திண்டாட்டம் பிப்ரவரி மாதத்தில் 7.37 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 9.70 சதவீதத்தில் இருந்த 8.65 சதவீதமாக குறைந்துள்ளது. நாட்டில் வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் மாபெரும் சாதனைகள்... பட்டியலை வெளியிட்டு தமிழ்நாடு அரசு பெருமிதம்!
-
இந்தி திணிப்பு : "பாஜகவுக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்" - முதலமைச்சர் !
-
பெருங்கவிக்கோ வா.மு சேதுராமன் மறைவு : காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் உத்தரவு !
-
’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் : ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”தொப்பியும், பதக்கமும் கொடுத்தால் பிரதமர் மோடி எங்கும் செல்வார்” : மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!