India
“இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம்” : 7.78% அதிகரித்த வேலைவாய்ப்பின்மை!
இந்திய நாட்டின் பொருளாதார நிலை, வரலாற்றில் இதுவரை அளவுக்கு நலிவடைந்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்த நிலையில், பா.ஜ.க அரசு வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதிலும் தொடர்ந்து சறுக்கலைச் சந்தித்து வருகிறது.
பா.ஜ.க அரசு இரண்டாவது முறையாகப் பதவியேற்றிருக்கும் நிலையில், வேலைவாய்ப்பின்மை திண்டாட்டம் சரிசெய்யப்படுமா என பலரும் உன்னிப்பாகக் கவனித்து வந்தனர். ஆனால் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம்தான் அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன.
ஆனால் மத்திய பா.ஜ.க அரசோ, நாட்டில் பொருளாதார சரிவே ஏற்படவில்லை. 2020-ல் பெரும் வேலை வாய்ப்பு உருவாகும் என உண்மையை மறைத்து பொய் பிரசாரங்களை மக்கள் மத்தியில் மேற்கொண்டு வருகிறது.
ஆனால் உண்மை நிலவரங்களை பார்த்தோமானால், இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் 6.1 சதவிகிதம் என்ற அளவிற்கு போய்விட்டதாக செய்திகள் வெளியாகின. அதாவது 100 பேரில் 6.1 பேருக்கு வேலை இல்லை என்று கூறப்பட்டது.
இந்நிலையில் இந்திய பொருளாதாரக் கண்காணிப்பு மையம், இந்தியாவின் வேலை இல்லா திண்டாட்டம் தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவிற்கு பிப்ரவரி மாதம் மட்டும் வேலையில்லாத் திட்டாட்டம் 7.78 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அதேப்போல், கிராமப்புறங்களில் 5.97 சதவீத்தில் இருந்த வேலையில்லா திண்டாட்டம் பிப்ரவரி மாதத்தில் 7.37 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 9.70 சதவீதத்தில் இருந்த 8.65 சதவீதமாக குறைந்துள்ளது. நாட்டில் வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
மொகரம் பண்டிகை : 350 ஆண்டுகளாக தொடரும் இஸ்லாமியர்கள் மற்றும் இந்து மக்கள் திருவிழா!
-
“எம்.எல்.ஏ சேர் எனக்குத்தான்.. உச்சமடைந்த த.வெ.க-வினரின் ரீல்ஸ் வெறி.. காற்றில் பறக்கும் விதிமுறைகள்”
-
ஏன் கீர்த்தனா பெயரை முதலில் போட்டீர்கள்? : அதிகாரிகளிடம் கடிந்து கொண்ட அமைச்சர் ஜெகதீஸ்வரி!
-
200 யூனிட்டு மின்சாரம் முதல் விஜய்யின் மூன்று பித்தலாட்டங்கள் : புட்டுப்புட்டு வைத்த முரசொலி!
-
“முதல்வரின் தவறான தகவலை சுட்டிக் காட்டியதற்கு ரெய்டா? ; மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன்” : எ.வ.வேலு பேட்டி!